தமிழ் கெழு மூவர்
|
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
|
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
|
|
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
|
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
|
5
|
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
|
|
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
|
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
|
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
|
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
|
10
|
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
|
|
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
|
|
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
|
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
|
|
தமிழ் கெழு மூவர் காக்கும்
|
15
|
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்'
என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
மாமூலனார்
|
|
மேல் |