தலையாலங்கானத்துச் செரு வென்ற
நெடுஞ்செழியன்
|
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
|
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து,
எழுந்து,
|
5
|
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
|
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
|
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
|
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
|
10
|
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
|
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
|
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
|
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
|
15
|
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
|
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
|
|
நார் அரி நறவின் எருமையூரன்,
|
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
|
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்,
என்று
|
20
|
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
|
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
|
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
|
தலைமகள் பரத்தையிற்
பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து
சொல்லியது. - மதுரை நக்கீரர்
|
|
|
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
|
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
|
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
|
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
|
5
|
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
|
|
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
|
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
|
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
|
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
|
10
|
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
|
|
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும்,
கையிகந்து
|
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
|
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
|
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
|
15
|
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
|
|
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
|
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
|
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
|
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
|
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
|
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
|
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப்
பெயர்ப்பின்,
|
5
|
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
|
|
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
|
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
|
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
|
|
வருதும்' என்றனர் அன்றே தோழி!
|
10
|
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
|
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
|
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
|
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
|
15
|
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
|
|
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
|
|
மண் பயம் பூப்பப் பாஅய்,
|
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்;
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி
சாத்தனார்.
|
|
|
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
|
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
|
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
|
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
|
5
|
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
|
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
|
|
ஆழல் வாழி, தோழி! அவரே,
|
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
|
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
|
10
|
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
|
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
|
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
|
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
|
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
|
15
|
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
|
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
|
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
|
|
மேல் |