தித்தன்
|
|
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
|
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
|
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
|
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
|
5
|
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
|
|
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
|
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
|
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
|
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
|
10
|
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
|
|
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
|
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
|
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
|
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
|
15
|
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
|
|
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
|
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
|
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
|
20
|
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
|
|
இளமை சென்று தவத் தொல்லஃதே;
|
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி,
எமக்கே?
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்
|
|
|
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
|
|
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
|
|
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
|
|
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
|
5
|
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
|
|
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
|
|
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
|
|
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
|
|
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
|
10
|
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
|
|
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
|
|
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
|
|
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
|
|
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
|
15
|
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
|
|
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
|
|
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
|
|
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
|
|
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
|
20
|
ஆதி போகிய பாய்பரி நன் மா
|
|
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
|
|
கல் முதிர் புறங்காட்டு அன்ன
|
|
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன்
சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
|
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
|
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
|
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
|
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
|
5
|
சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,
|
|
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்
துறை,
|
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
|
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
|
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
|
10
|
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,
|
|
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
|
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
|
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
|
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
|
15
|
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி
|
|
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
|
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
|
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
|
|
வல்லினும், வல்லார்ஆயினும்,
சென்றோர்க்குச்
|
20
|
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
|
|
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
|
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
|
|
வேய் அமைக் கண் இடை புரைஇ,
|
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.-பரணர்
|
|
|
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
|
|
நாண் இலை மன்ற யாணர் ஊர!
|
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
|
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
|
5
|
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
|
|
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
|
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
|
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
|
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
|
10
|
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
|
|
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
|
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
|
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
|
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
|
15
|
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
|
|
போர் அடு தானைக் கட்டி
|
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
|
தலைமகற்குத் தோழி வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
மேல் |