திதியன் (ஐம் பெரு வேளிருள் ஒருவன்)
|
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
|
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து,
எழுந்து,
|
5
|
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
|
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
|
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
|
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
|
10
|
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
|
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
|
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
|
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
|
15
|
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
|
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
|
|
நார் அரி நறவின் எருமையூரன்,
|
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
|
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்,
என்று
|
20
|
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
|
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
|
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
|
தலைமகள் பரத்தையிற்
பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து
சொல்லியது. - மதுரை நக்கீரர்
|
|
|
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
|
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
|
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
|
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
|
5
|
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
|
|
காடு இறந்தனரே, காதலர். மாமை,
|
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
|
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
10
|
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
|
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
|
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
|
|
ஆதிமந்தி போல, பேதுற்று
|
15
|
அலந்தனென் உழல்வென்கொல்லோ
பொலந்தார்,
|
|
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
|
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
|
|
உடை மதில் ஓர் அரண் போல,
|
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
|
|
|
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
|
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
|
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
|
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
|
5
|
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
|
|
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
|
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
|
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
|
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
|
10
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
|
|
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
|
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
|
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
|
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
|
15
|
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
|
|
திதியனொடு பொருத அன்னி போல
|
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
|
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
|
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
|
20
|
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
|
|
மின் நேர் மருங்குல், குறுமகள்
|
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம்
ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
நக்கீரர்
|
|
|
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
|
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
|
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
|
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
|
5
|
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன்
காட்டு
|
|
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
|
|
வாள்வரி பொருத புண் கூர் யானை
|
|
புகர் சிதை முகத்த குருதி வார,
|
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
|
10
|
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
|
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
|
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
|
15
|
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
|
|
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
|
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
|
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
|
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
|
20
|
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
|
|
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
|
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
|
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
|
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
|
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப்
பாட்டி
|
5
|
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
|
|
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
|
|
விடியல் வைகறை இடூஉம் ஊர!
|
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
|
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
|
10
|
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்
போகிய,
|
|
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
|
|
அன்னிமிஞிலியின் இயலும்
|
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
|
|
|
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
|
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
|
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
|
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
|
5
|
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து,
அருளாது,
|
|
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
|
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
|
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
|
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
|
10
|
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
|
|
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
|
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
|
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
|
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
|
15
|
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
|
|
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
|
|
கொண்டல் மா மலை நாறி,
|
|
அம் தீம் கிளவி வந்தமாறே.
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப்
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
|
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
|
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
|
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
|
5
|
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
|
|
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
|
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
|
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
|
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
|
10
|
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச்
சீறியாழ்ப்
|
|
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
|
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
|
|
வேளிரொடு பொரீஇய, கழித்த
|
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
|
தலைமகன் பிரிவின்கண்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
மேல் |