திதியன் (பொதியிற் செல்வன்)
|
|
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல்
சாஅய்,
|
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
|
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும்,
காஞ்சிப்
|
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
|
5
|
வதுவை நாற்றம் புதுவது கஞல,
|
|
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
|
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
|
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
|
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
|
10
|
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
|
|
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
|
|
இகழுநர் இகழா இள நாள் அமையம்
|
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
|
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
|
15
|
வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
|
|
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
|
|
மெல்லிய இனிய கூறி, வல்லே
|
|
வருவர் வாழி தோழி! பொருநர்
|
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
|
20
|
பொதியிற் செல்வன், பொலந்தேர்த்
திதியன்,
|
|
இன் இசை இயத்தின் கறங்கும்
|
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.
|
பருவங் கண்டு அழிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர்
தந்த பூதப் பாண்டியன்
|
|
|
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
|
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
|
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
|
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
|
5
|
பாம்பு எறி கோலின் தமியை வைகி,
|
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
|
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
|
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
|
10
|
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
|
|
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
|
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
|
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
|
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
|
15
|
புகல் அரும், பொதியில் போலப்
|
|
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!
|
அல்லகுறிப்பட்டுப் போகின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
மேல் |