தொண்டையார்
|
|
வினை நவில் யானை விறற் போர்த்
தொண்டையர்
|
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
|
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
|
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
|
5
|
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
|
|
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
|
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
|
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
|
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
|
10
|
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
|
|
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
|
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
|
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
|
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
|
15
|
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
|
|
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
|
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
|
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
|
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
|
20
|
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்
கை,
|
|
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
|
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
|
|
அறல் என நெறிந்த கூந்தல்,
|
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -
தாயங்கண்ணனார்
|
|
மேல் |