நள்ளி
|
|
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
|
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
|
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
|
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
|
5
|
சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,
|
|
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்
துறை,
|
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
|
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
|
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
|
10
|
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,
|
|
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
|
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
|
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
|
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
|
15
|
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி
|
|
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
|
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
|
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
|
|
வல்லினும், வல்லார்ஆயினும்,
சென்றோர்க்குச்
|
20
|
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
|
|
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
|
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
|
|
வேய் அமைக் கண் இடை புரைஇ,
|
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.-பரணர்
|
|
|
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்,
|
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
|
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள்,
|
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
|
5
|
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து,
|
|
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற,
|
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு,
|
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி,
|
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
|
10
|
பெருங் கல் நாட! பிரிதிஆயின்,
|
|
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
|
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும்
|
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ்,
|
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி
|
15
|
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து,
|
|
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
|
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
|
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத்
தோழி சொல்லியது. - கபிலர்
|
|
மேல் |