நெடு வேள் ஆவி
|
|
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
|
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
|
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
|
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
|
5
|
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
|
|
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
|
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
|
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய்
நாட்டுப்
|
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
|
10
|
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
|
|
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
|
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
|
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
|
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
|
15
|
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
|
|
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
|
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
|
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
|
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
|
பிரிவிடை ஆற்றாளாய
தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்
|
|
|
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
|
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்'
எனத்
|
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
|
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய்
உழந்து
|
5
|
ஆழல் வாழி, தோழி! தாழாது,
|
|
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
|
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
|
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
|
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
|
10
|
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
|
|
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
|
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
|
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
|
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது
|
15
|
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
|
|
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
|
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
|
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |