பசும் பூட் பாண்டியன்
|
|
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
|
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
|
|
கடல் கண்டன்ன மாக விசும்பின்
|
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
|
5
|
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி,
|
|
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
|
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
|
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
|
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக;
|
10
|
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என
|
|
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்,
|
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல்,
|
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
|
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
|
15
|
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது,
|
|
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
|
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
|
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
|
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
|
20
|
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,
|
|
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
|
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
|
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
|
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
|
25
|
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே.
|
இரவுக் குறிக்கண் தலைமகளைத்
கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
'செறுவோர் செம்மல் வாட்டலும்,
சேர்ந்தோர்க்கு
|
|
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
|
|
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
|
|
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
|
5
|
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர்,
|
|
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப்
பதுக்கைக்
|
|
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
|
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
|
|
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
|
10
|
வருவர் வாழி, தோழி! பொருவர்
|
|
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
|
|
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன்
|
|
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
|
|
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
|
15
|
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
|
'வைகல்தோறும் பசலை பாய, என்
|
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
|
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
|
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
|
5
|
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
|
|
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
|
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல
நினைந்து,
|
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
|
10
|
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
|
|
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
|
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர்
அறிந்து,
|
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
|
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
|
15
|
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
|
|
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
|
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
|
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
|
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
|
20
|
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
|
|
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
|
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
|
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த
|
25
|
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
|
|
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
நக்கீரர்
|
|
|
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
|
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
|
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
|
5
|
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,
|
|
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
|
|
நோக்குதொறும் நோக்குதொறும்
தவிர்விலையாகி,
|
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
|
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
|
10
|
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
|
|
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
|
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
|
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
|
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
|
15
|
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது
|
|
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
|
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
|
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
|
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
|
20
|
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
|
|
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!
|
பரத்தையிற் பிரிந்து வந்து
கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
-பரணர்
|
|
|
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
|
|
மறம் கெழு தானை அரசருள்ளும்,
|
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
|
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி
தோள்,
|
5
|
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
|
|
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
|
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
|
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
|
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
|
10
|
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
|
|
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
|
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
|
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
|
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
|
15
|
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
|
|
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
|
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
|
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
|
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி
பாக்கத்து,
|
20
|
வழங்கல் ஆனாப் பெருந் துறை
|
|
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
மேல் |