பசும் பூட் பொறையன்
|
|
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
|
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
|
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
|
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
|
5
|
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை
|
|
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
|
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப்
பிரிந்தோர்
|
|
புலம் கந்தாக இரவலர் செலினே,
|
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
|
10
|
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
|
|
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
|
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
|
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
|
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
|
15
|
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!
|
|
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
|
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
|
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
|
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
|
20
|
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்
|
|
மேல் |