பண்ணன்
|
|
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
|
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
|
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
|
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
|
5
|
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
|
|
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
|
|
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
|
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
|
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
|
10
|
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்
|
|
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
|
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை,
|
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
|
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
|
15
|
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர்
|
|
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
|
|
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
|
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
|
|
வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
|
20
|
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி
பயிற்றி,
|
|
திதலை அல்குல் எம் காதலி
|
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.
|
வினை முடித்து மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர்
கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
|
|
|
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
|
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
|
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
|
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
|
5
|
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
|
|
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார்,
காண்பின்
|
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
|
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
|
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
|
10
|
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
|
|
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
|
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
|
|
வல்லே வருவர்போலும் வெண் வேல்
|
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
|
15
|
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
|
|
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
|
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
|
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
|
|
அணங்குடை வன முலைத் தாஅய நின்
|
20
|
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர்
இளம் பொன்சாத்தன் கொற்றனார்
|
|
மேல் |