பதினான்கு வேளிர்
|
|
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
|
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
|
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
|
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
|
5
|
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
|
|
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
|
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
|
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
|
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
|
10
|
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
|
|
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
|
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
|
|
கழுவுள் காமூர் போலக்
|
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என்
நெஞ்சே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. -
பரணர்
|
|
மேல் |