பழையன்
|
|
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
|
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
|
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
|
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
|
5
|
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
|
|
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
|
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
|
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
|
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
|
10
|
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
|
|
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
|
|
கண்டது நோனானாகி, திண் தேர்க்
|
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
|
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
|
15
|
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
|
|
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
|
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
|
|
தண் குடவாயில் அன்னோள்
|
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
|
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து
ஈர்க்கும்
|
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
|
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
|
5
|
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும்
|
|
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும்
ஊரனொடு
|
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
|
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
|
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
|
10
|
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
|
|
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
|
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
|
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
|
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
|
15
|
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
|
|
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
|
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
|
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்
|
|
திரு நுதல் பசப்ப நீங்கும்
|
20
|
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி
நெருங்கியது. -பரணர்
|
|
|
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி,
|
|
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு
நுதல்,
|
|
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர்
|
|
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
|
5
|
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில்,
|
|
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன
|
|
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து,
|
|
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
|
|
இழை அணி யானைச் சோழர் மறவன்
|
10
|
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை,
|
|
புனல் மலி புதவின், போஒர் கிழவோன்,
|
|
பழையன் ஓக்கிய வேல் போல்,
|
|
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
மேல் |