பாண்டியன்
|
|
அம்ம, வாழி தோழி! 'பொன்னின்
|
|
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
|
|
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்
|
|
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
|
5
|
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
|
|
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
|
|
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
|
|
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
|
|
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
|
10
|
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும்
|
|
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்'
என்று
|
|
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
|
|
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
|
|
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது
|
15
|
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்,
|
|
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
|
|
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
|
|
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
|
|
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |