பாணன்
|
|
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
|
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல்
சூழ்ச்சியின்,
|
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
|
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
|
5
|
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
|
|
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
|
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
|
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
|
|
நல்காது துறந்த காதலர், 'என்றும்
|
10
|
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
|
|
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
|
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
|
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
|
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
|
15
|
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
|
|
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
|
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
|
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
|
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
|
20
|
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
|
|
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
|
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
|
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
|
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
|
25
|
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
|
|
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
|
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
|
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
|
|
நாண் இலை மன்ற யாணர் ஊர!
|
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
|
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
|
5
|
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
|
|
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
|
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
|
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
|
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
|
10
|
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
|
|
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
|
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
|
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
|
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
|
15
|
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
|
|
போர் அடு தானைக் கட்டி
|
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
|
தலைமகற்குத் தோழி வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
அம்ம! வாழி, தோழி! காதலர்,
|
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர்,
|
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த
|
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
|
5
|
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது
|
|
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி,
|
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு
கோள்
|
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
|
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு,
|
10
|
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம்
|
|
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய,
|
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல்,
|
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்;
|
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள்,
|
15
|
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ,
|
|
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது,
|
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை,
|
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை,
|
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
|
20
|
சோலை அத்தம் மாலைப் போகி,
|
|
ஒழியச் சென்றோர்மன்ற;
|
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?
|
கொண்டு நீங்கக் கருதி
ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
|
|
|
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
|
|
வாளை நாள் இரை தேரும் ஊர!
|
|
நாணினென், பெரும! யானே பாணன்
|
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
|
5
|
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
|
|
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து
ஒழிந்த
|
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
|
|
கணையன் நாணியாங்கு மறையினள்
|
|
மெல்ல வந்து, நல்ல கூறி,
|
10
|
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
|
|
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
|
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
|
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
|
|
நுதலும் கூந்தலும் நீவி,
|
15
|
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.
|
தோழி வாயில் மறுத்தது;
தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
மேல் |