பாரி
|
|
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
|
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
|
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
|
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று
ஒருத்தல்
|
5
|
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
|
|
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
|
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
|
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
|
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
|
10
|
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
|
|
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
|
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
|
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
|
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
|
15
|
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
|
|
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
|
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர்
கொண்டு,
|
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
|
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
|
20
|
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
|
|
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
|
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
|
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
|
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?
|
களவுக் காலத்துப் பிரிந்து
வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை
நக்கீரனார்
|
|
|
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
|
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
|
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
|
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
|
5
|
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை
|
|
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
|
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப்
பிரிந்தோர்
|
|
புலம் கந்தாக இரவலர் செலினே,
|
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
|
10
|
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
|
|
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
|
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
|
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
|
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
|
15
|
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!
|
|
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
|
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
|
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
|
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
|
20
|
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்
|
|
மேல் |