பிட்டன்
|
|
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
|
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
|
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
|
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
|
5
|
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
|
|
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
|
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
|
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
|
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
|
10
|
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
|
|
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
|
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
|
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
|
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
|
15
|
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
|
|
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
|
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
|
|
திருந்துஇலை எஃகம் போல,
|
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.
|
தலைமகன் பிரியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.-
மருதன் இள நாகனார்
|
|
|
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
|
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
|
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
|
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
|
5
|
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
|
|
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
|
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை
முழங்கும்
|
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
|
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
|
10
|
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
|
|
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
|
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
|
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
|
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
|
15
|
தண் கமழ் நீலம் போல,
|
|
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை
கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி
சாத்தனார்
|
|
மேல் |