புல்லி
|
|
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
|
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்'
எனத்
|
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
|
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய்
உழந்து
|
5
|
ஆழல் வாழி, தோழி! தாழாது,
|
|
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
|
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
|
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
|
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
|
10
|
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
|
|
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
|
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
|
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
|
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது
|
15
|
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
|
|
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
|
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
|
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
|
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
|
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
|
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
|
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி
சிறந்து,
|
5
|
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு
பிளந்து,
|
|
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
|
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
|
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
|
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி
|
10
|
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,
|
|
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
|
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
|
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
|
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்
|
|
|
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
|
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
|
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
|
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
|
5
|
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
|
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
|
|
ஆழல் வாழி, தோழி! அவரே,
|
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
|
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
|
10
|
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
|
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
|
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
|
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
|
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
|
15
|
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
|
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
|
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
|
|
|
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
|
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
|
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
|
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
|
5
|
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்
|
|
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
|
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
|
|
கல்லுடை அதர கானம் நீந்தி,
|
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
|
10
|
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
|
|
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
|
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
|
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
|
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
|
15
|
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
|
|
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
|
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
|
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
|
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
|
20
|
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,
|
|
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
|
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
|
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
|
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை,
|
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
|
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென,
|
5
|
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர்
|
|
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள்
|
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
|
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
|
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
|
10
|
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி
|
|
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
|
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
|
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
|
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
|
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
|
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
|
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
|
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
|
5
|
எவன் கையற்றனை? இகுளை! அவரே
|
|
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
|
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
|
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
|
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
|
10
|
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
|
|
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
|
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
|
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
|
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
|
15
|
அருவித் துவலையொடு மயங்கும்
|
|
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
|
|
|
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
|
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
|
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
|
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந்
தோட்டுக்
|
5
|
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,
|
|
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
|
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
|
|
வரி அணி பணைத் தோள் வார் செவித்
தன்னையர்
|
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
|
10
|
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
|
|
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
|
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
|
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
|
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
|
15
|
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
|
|
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
|
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
|
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
|
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
|
20
|
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
|
|
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
|
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
|
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
|
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
|
25
|
வேனில் அதிரல் வேய்ந்த நின்
|
|
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
மேல் |