புன்றுறை
|
|
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
|
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
|
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
|
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
|
5
|
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
|
|
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
|
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
|
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
|
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
|
10
|
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
|
|
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
|
|
கண்டது நோனானாகி, திண் தேர்க்
|
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
|
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
|
15
|
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
|
|
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
|
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
|
|
தண் குடவாயில் அன்னோள்
|
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
மேல் |