பொறையன்
|
|
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
|
|
மறம் கெழு தானை அரசருள்ளும்,
|
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
|
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி
தோள்,
|
5
|
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
|
|
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
|
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
|
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
|
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
|
10
|
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
|
|
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
|
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
|
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
|
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
|
15
|
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
|
|
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
|
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
|
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
|
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி
பாக்கத்து,
|
20
|
வழங்கல் ஆனாப் பெருந் துறை
|
|
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
மேல் |