மத்தி
|
|
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
|
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
|
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
|
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
|
5
|
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
|
|
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
|
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
|
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
|
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
|
10
|
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
|
|
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
|
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
|
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
|
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
|
15
|
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
|
|
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
|
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
|
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
|
20
|
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
|
|
இளமை சென்று தவத் தொல்லஃதே;
|
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி,
எமக்கே?
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்
|
|
|
கேளாய், எல்ல! தோழி! வாலிய
|
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
|
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
|
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு
உரிஞுதொறும்,
|
5
|
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
|
|
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
|
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
|
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
|
10
|
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
|
|
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
|
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
|
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
|
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
|
15
|
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
|
|
நீர் ஒலித்தன்ன பேஎர்
|
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.
-மாமூலனார்
|
|
|
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
|
|
நாண் இலை மன்ற யாணர் ஊர!
|
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
|
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
|
5
|
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
|
|
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
|
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
|
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
|
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
|
10
|
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
|
|
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
|
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
|
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
|
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
|
15
|
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
|
|
போர் அடு தானைக் கட்டி
|
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
|
தலைமகற்குத் தோழி வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
மேல் |