மழவர்
|
|
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
|
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
|
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
|
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
|
5
|
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
|
|
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
|
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
|
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய்
நாட்டுப்
|
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
|
10
|
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
|
|
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
|
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
|
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
|
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
|
15
|
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
|
|
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
|
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
|
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
|
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
|
பிரிவிடை ஆற்றாளாய
தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்
|
|
|
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
|
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
|
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
|
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
|
5
|
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
|
|
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
|
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
|
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
|
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
|
10
|
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்
|
|
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து
அணிந்து,
|
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
|
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
|
|
துஞ்சா முழவின் கோவற் கோமான்
|
15
|
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,
|
|
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
|
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
|
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
|
மகட்போக்கிய நற்றாய்
தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
|
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
|
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
|
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
|
5
|
பாசி தின்ற பைங் கண் யானை
|
|
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
|
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
|
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர்
ஆயினும்,
|
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
|
10
|
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
|
|
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
|
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
|
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
|
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
|
15
|
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
|
|
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
|
|
குடநாடு பெறினும் தவிரலர்
|
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
|
பிரிவிடை மெலிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
|
அம்ம வாழி, தோழி! 'இம்மை
|
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
|
|
தொன்றுபடு பழமொழி இன்று
பொய்த்தன்றுகொல்?
|
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
|
5
|
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
|
|
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
|
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
|
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
|
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
|
10
|
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
|
|
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங்
காட்டு,
|
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
|
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
|
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
|
15
|
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
|
|
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
|
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
|
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி
தோழிக்குச் சொல்லியது; தோழி
கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். -
மாமூலனார்
|
|
|
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
|
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
|
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
|
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
|
5
|
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
|
|
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
|
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
|
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
|
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
|
10
|
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
|
|
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
|
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
|
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
|
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
|
15
|
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
|
|
மறப் புலி உழந்த வசி படு சென்னி
|
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
|
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
|
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
|
20
|
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?
|
செலவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி
தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
|
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
|
|
வலம் படு முரசிற் சேரலாதன்
|
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
|
5
|
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
|
|
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
|
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
|
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
|
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
|
10
|
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
|
|
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
|
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
|
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
|
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
|
15
|
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
|
|
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
|
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
|
பிரிவிடை ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
|
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
|
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
|
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
|
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
|
5
|
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
|
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
|
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
|
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
|
10
|
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
|
|
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
|
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
|
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
|
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
|
15
|
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு
கதுப்பின்,
|
|
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என
|
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
|
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார் |
|
|
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
|
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
|
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
|
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
|
5
|
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
|
|
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
|
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
|
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
|
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
|
10
|
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
|
|
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
|
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
|
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
|
15
|
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
|
|
வேனில் வெற்பின் கானம் காய,
|
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
|
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
|
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
|
20
|
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
|
|
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
|
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
|
|
வைகு கடல் அம்பியின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தலைமகட்குத் தோழி
சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
|
|
|
அம்ம வாழி, தோழி! பல் நாள்
|
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
|
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
|
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
|
5
|
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார்
பூட்டி,
|
|
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
|
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
|
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்
பூண்
|
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
|
10
|
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்
|
|
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
|
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
|
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
|
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
|
15
|
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
|
|
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
|
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
|
|
உழை மான் இன நிரை ஓடும்
|
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
நக்கீரனார்
|
|
|
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
|
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
|
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
|
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
|
5
|
தறுகணாளர் நல் இசை நிறுமார்,
|
|
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
|
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
|
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
|
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
|
10
|
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
|
|
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
|
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
|
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம்
இறந்தோர்,
|
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
|
15
|
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
|
|
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
|
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
|
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
|
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
|
20
|
திரு நுதல் மகளிர் குரவை அயரும்
|
|
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
|
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
|
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
|
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
|
25
|
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
|
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
|
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
|
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
|
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
|
5
|
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
|
|
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
|
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
|
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
|
|
காடு மிக நெடிய என்னார், கோடியர்
|
10
|
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
|
|
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
|
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
|
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
|
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
|
15
|
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்
|
|
தண் பெரு படாஅர் வெரூஉம்
|
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது
வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச்
சாத்தனார்
|
|
|
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
|
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
|
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
|
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
|
5
|
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
|
|
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
|
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
|
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
|
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
|
10
|
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
|
|
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
|
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
|
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
|
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
|
15
|
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
|
|
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
|
|
கள்ளி நீழல் கதறுபு வதிய,
|
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
|
|
எமியம் கழிதந்தோயே பனி இருள்
|
20
|
பெருங் கலி வானம் தலைஇய
|
|
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
|
முன்னொரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன்
பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச்
சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
மேல் |