மாந்தரன் பொறையன் கடுங்கோ
|
|
இலமலர் அன்ன அம் செந் நாவின்
|
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
|
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
|
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
|
5
|
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
|
|
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
|
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
|
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
|
|
கறை அடி யானை நன்னன் பாழி,
|
10
|
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
|
|
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
|
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
|
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
|
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
|
15
|
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
|
|
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
|
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
|
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
|
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
|
20
|
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
|
|
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
|
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
|
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
|
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு
உறைப்ப,
|
25
|
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;
|
|
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
மேல் |