மாநிதிக் கிழவன்
|
|
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
|
|
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
|
|
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
|
|
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
|
5
|
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
|
|
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
|
|
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
|
|
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
|
|
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
|
10
|
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
|
|
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
|
|
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
|
|
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது,
|
|
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
|
15
|
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக்
|
|
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
|
|
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
|
|
தானே புகுதந்தோனே; யான் அது
|
|
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
|
20
|
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச்
சென்று
|
|
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
|
|
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
|
|
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
|
|
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
|
25
|
பழங் கணோட்டமும் நலிய,
|
|
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே.
|
பரத்தையிற் பிரிந்த
தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன்
கண்ணனார்
|
|
மேல் |