மிஞிலி
|
|
இலமலர் அன்ன அம் செந் நாவின்
|
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
|
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
|
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
|
5
|
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
|
|
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
|
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
|
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
|
|
கறை அடி யானை நன்னன் பாழி,
|
10
|
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
|
|
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
|
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
|
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
|
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
|
15
|
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
|
|
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
|
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
|
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
|
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
|
20
|
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
|
|
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
|
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
|
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
|
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு
உறைப்ப,
|
25
|
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;
|
|
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
|
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
|
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
|
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
|
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
|
5
|
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;
|
|
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
|
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
|
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம்
பட்டென,
|
|
காணிய செல்லாக் கூகை நாணி,
|
10
|
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை
|
|
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
|
|
மாலை, வருதல் வேண்டும் சோலை
|
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
|
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.
|
பகல் வருவானை 'இரவு வருக'
என்றது. - பரணர்
|
|
|
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
|
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
|
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
|
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
|
5
|
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
|
|
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
|
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
|
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
|
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
|
10
|
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
|
|
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
|
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
|
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
|
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
|
15
|
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
|
|
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
|
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
|
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
|
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
|
20
|
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
|
|
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
|
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
|
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
|
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
|
25
|
அணங்குசால், அரிவை இருந்த
|
|
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
யாம இரவின் நெடுங் கடை நின்று,
|
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
|
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
|
|
|
5
|
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
|
|
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
|
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
|
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
|
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள்
ஒருங்கு
|
10
|
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
|
|
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
|
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
|
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
|
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
|
15
|
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
|
|
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
|
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
|
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
|
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
|
20
|
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
|
|
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
|
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
|
|
கார் மலர் கடுப்ப நாறும்,
|
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே!
|
புணர்ந்து நீங்கும் தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித்
தேர்ப்
|
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
|
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
|
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
|
5
|
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
|
|
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
|
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
|
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
|
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
|
10
|
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
|
|
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
|
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
|
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
|
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு,
நின்
|
15
|
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
|
|
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
|
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
|
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
|
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை தலைமகற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
மேல் |