முசிறி முற்றிய செழியன்
|
|
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
|
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
|
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
|
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
|
5
|
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
|
|
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
|
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
|
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
|
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
|
10
|
யாமே எமியம்ஆக, தாமே
|
|
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
|
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
|
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
|
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
15
|
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,
|
|
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
|
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது
அழிந்து,
|
|
பானாட் கங்குலும் பகலும்
|
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.-
நக்கீரர்
|
|
|
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
|
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
|
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
|
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
|
5
|
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
|
|
அரிது செய் விழுப் பொருள் எளிதினின்
பெறினும்
|
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
|
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
|
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
|
10
|
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
|
|
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
|
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
|
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
|
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
|
15
|
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
|
|
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
|
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
|
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
|
|
மேல் |