முசுண்டை
|
|
அம்ம வாழி, தோழி! பல் நாள்
|
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
|
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
|
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
|
5
|
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார்
பூட்டி,
|
|
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
|
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
|
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்
பூண்
|
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
|
10
|
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்
|
|
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
|
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
|
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
|
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
|
15
|
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
|
|
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
|
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
|
|
உழை மான் இன நிரை ஓடும்
|
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
நக்கீரனார்
|
|
மேல் |