வடவர்
|
|
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
|
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
|
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து,
|
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
|
5
|
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம
|
|
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
|
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்
|
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென,
|
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே
|
10
|
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்;
|
|
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என,
|
|
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண்
|
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப!
|
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
|
15
|
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;
|
|
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
|
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
|
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண்
திமில்
|
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
|
20
|
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன்,
|
|
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
|
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு,
|
|
முன்றில் தாழைத் தூங்கும்
|
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன்,
ஊர்க்கே?
|
பகற் குறிக்கண் தோழி
தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்
|
|
மேல் |