வடுகர்
|
|
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
|
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
|
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
|
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு
தின்று
|
5
|
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
|
|
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
|
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
|
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
|
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
|
10
|
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
|
|
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
|
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
|
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
|
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
|
15
|
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
|
|
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
|
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
|
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
|
|
மாலை இன் துணைஆகி, காலைப்
|
20
|
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
|
|
மண மனை கமழும் கானம்
|
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
|
தோழி தலைமகள் குறிப்பு
அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.-
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
|
|
|
வினை நவில் யானை விறற் போர்த்
தொண்டையர்
|
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
|
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
|
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
|
5
|
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
|
|
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
|
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
|
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
|
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
|
10
|
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
|
|
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
|
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
|
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
|
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
|
15
|
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
|
|
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
|
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
|
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
|
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
|
20
|
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்
கை,
|
|
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
|
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
|
|
அறல் என நெறிந்த கூந்தல்,
|
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -
தாயங்கண்ணனார்
|
|
|
'வைகல்தோறும் பசலை பாய, என்
|
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
|
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
|
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
|
5
|
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
|
|
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
|
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல
நினைந்து,
|
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
|
10
|
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
|
|
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
|
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர்
அறிந்து,
|
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
|
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
|
15
|
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
|
|
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
|
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
|
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
|
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
|
20
|
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
|
|
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
|
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
|
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த
|
25
|
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
|
|
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
நக்கீரர்
|
|
|
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
|
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
|
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
|
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
|
5
|
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை
|
|
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு
இயல்
|
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
|
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
|
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
|
10
|
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
|
|
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
|
|
அறை இறந்து, அவரோ சென்றனர்
|
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
|
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
|
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
|
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
|
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
|
5
|
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்
|
|
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
|
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
|
|
கல்லுடை அதர கானம் நீந்தி,
|
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
|
10
|
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
|
|
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
|
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
|
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
|
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
|
15
|
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
|
|
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
|
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
|
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
|
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
|
20
|
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,
|
|
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
|
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
|
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
|
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
|
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
|
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
|
5
|
கல்லா இளையர் கலித்த கவலை,
|
|
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
|
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
|
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
|
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
|
10
|
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
|
|
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
|
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
|
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
|
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
|
15
|
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,
|
|
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
|
|
நோய் இலர் பெயர்தல் அறியின்,
|
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன்
தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங்
கொற்றனார்
|
|
|
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
|
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
|
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
|
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
|
5
|
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர்
மண்டிலம்
|
|
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
|
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
|
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
|
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
|
10
|
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
|
|
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
|
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
|
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
|
|
முனை அரண் கடந்த வினை வல் தானை,
|
15
|
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
|
|
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
|
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது
உயிர்த்து,
|
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
|
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
|
20
|
எதிர் மலர் இணைப் போது அன்ன. தன்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
இளங்கௌசிகனார்
|
|
மேல் |