வாணன்
|
|
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
|
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
|
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
|
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
|
5
|
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
|
|
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
|
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
|
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
|
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
|
10
|
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
|
|
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
|
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
|
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
|
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
|
15
|
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
|
|
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
|
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
|
|
வாணன் சிறுகுடி வடாஅது
|
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல்
போன்றே?
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - .........
|
|
|
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
|
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி
|
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
|
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
|
5
|
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
|
|
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
|
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
|
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
|
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
|
10
|
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
|
|
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
|
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
|
|
தண்டலை கமழும் கூந்தல்,
|
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
காமக்கணி நப்பாலத்தனார்
|
|
|
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
|
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
|
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
|
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
|
5
|
தறுகணாளர் நல் இசை நிறுமார்,
|
|
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
|
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
|
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
|
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
|
10
|
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
|
|
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
|
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
|
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம்
இறந்தோர்,
|
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
|
15
|
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
|
|
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
|
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
|
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
|
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
|
20
|
திரு நுதல் மகளிர் குரவை அயரும்
|
|
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
|
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
|
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
|
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
|
25
|
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
மேல் |