வான வரம்பன்
|
|
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
|
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
|
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
|
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
|
5
|
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
|
|
காடு இறந்தனரே, காதலர். மாமை,
|
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
|
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
10
|
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
|
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
|
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
|
|
ஆதிமந்தி போல, பேதுற்று
|
15
|
அலந்தனென் உழல்வென்கொல்லோ
பொலந்தார்,
|
|
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
|
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
|
|
உடை மதில் ஓர் அரண் போல,
|
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
|
|
359. பாலை
|
|
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
|
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
|
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
|
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
|
5
|
எவன் கையற்றனை? இகுளை! அவரே
|
|
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
|
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
|
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
|
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
|
10
|
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
|
|
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
|
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
|
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
|
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
|
15
|
அருவித் துவலையொடு மயங்கும்
|
|
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
|
|
|
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
|
|
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
|
|
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
|
|
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
|
5
|
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,
|
|
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு
பரட்டு
|
|
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
|
|
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
|
|
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
|
10
|
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து,
|
|
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
|
|
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
|
|
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
|
|
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
|
15
|
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்
|
|
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
|
|
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
|
|
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
|
20
|
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை
|
|
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
|
|
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
|
|
படு மழை உருமின் முழங்கும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. -
நக்கீரனார்
|
|
மேல் |