வானவன்
|
|
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
|
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
|
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
|
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
|
5
|
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
|
|
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
|
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
|
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
|
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
|
10
|
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய்
|
|
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
|
|
யாமே எமியம் ஆக, நீயே
|
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
|
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
|
15
|
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்
தோள்,
|
|
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
|
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
|
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
|
|
செய்வினை ஆற்றுற விலங்கின்,
|
20
|
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?
|
தலைமகன் இடைச்சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்
ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
|
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
|
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
|
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
|
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
|
5
|
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
|
|
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
|
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
|
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
|
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
|
10
|
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
|
|
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
|
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
|
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
|
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
|
15
|
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
|
|
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
|
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
|
|
திருந்துஇலை எஃகம் போல,
|
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.
|
தலைமகன் பிரியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.-
மருதன் இள நாகனார்
|
|
|
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
|
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
|
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
|
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
|
5
|
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
|
|
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
|
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை
முழங்கும்
|
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
|
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
|
10
|
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
|
|
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
|
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
|
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
|
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
|
15
|
தண் கமழ் நீலம் போல,
|
|
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை
கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி
சாத்தனார்
|
|
|
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
|
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
|
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
|
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
|
5
|
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
|
|
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
|
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
|
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
|
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
|
10
|
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
|
|
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
|
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
|
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
|
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
|
15
|
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்
|
|
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
|
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
|
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
|
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
|
20
|
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
|
|
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க்
கவுதமன் சாதேவனார்
|
|
|
வினை நவில் யானை விறற் போர்த்
தொண்டையர்
|
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
|
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
|
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
|
5
|
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
|
|
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
|
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
|
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
|
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
|
10
|
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
|
|
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
|
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
|
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
|
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
|
15
|
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
|
|
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
|
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
|
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
|
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
|
20
|
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்
கை,
|
|
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
|
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
|
|
அறல் என நெறிந்த கூந்தல்,
|
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -
தாயங்கண்ணனார்
|
|
|
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
|
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
|
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
|
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
|
5
|
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
|
|
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
|
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
|
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
|
|
காடு மிக நெடிய என்னார், கோடியர்
|
10
|
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
|
|
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
|
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
|
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
|
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
|
15
|
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்
|
|
தண் பெரு படாஅர் வெரூஉம்
|
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது
வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச்
சாத்தனார்
|
|
|
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
|
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
|
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
|
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
|
5
|
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர்
மண்டிலம்
|
|
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
|
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
|
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
|
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
|
10
|
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
|
|
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
|
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
|
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
|
|
முனை அரண் கடந்த வினை வல் தானை,
|
15
|
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
|
|
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
|
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது
உயிர்த்து,
|
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
|
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
|
20
|
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
இளங்கௌசிகனார்
|
|
மேல் |