வெள்ளிவீதி
|
|
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
|
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
|
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
|
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
|
5
|
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென,
|
|
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
|
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
|
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
|
|
வெள்ளி வீதியைப் போல நன்றும்
|
10
|
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,
|
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
|
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
|
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
|
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!
|
செலவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
ஒளவையார்
|
|
மேல் |