வேளிர்
|
|
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
|
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
|
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
|
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
|
5
|
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
|
|
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
|
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
|
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
|
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
|
10
|
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
|
|
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
|
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
|
|
கழுவுள் காமூர் போலக்
|
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என்
நெஞ்சே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. -
பரணர்
|
|
|
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
|
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
|
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
|
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும்
புறம்,
|
5
|
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
|
|
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
|
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
|
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
|
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
|
10
|
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
|
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
|
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
|
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
|
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
|
15
|
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
|
|
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
|
வாயில் வேண்டிச் சென்ற
விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
|
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
|
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும்,
அன்னோட்
|
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
|
5
|
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
|
|
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
|
|
மாய இருள் அளை மாய் கல் போல,
|
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
|
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
|
10
|
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
|
|
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
|
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
|
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
|
|
காமம் கைம்மிக உறுதர,
|
15
|
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!
|
அல்லகுறிப்பட்டுப்
பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பரணர்
|
|
|
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
|
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
|
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
|
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
|
5
|
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
|
|
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
|
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
|
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
|
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
|
10
|
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச்
சீறியாழ்ப்
|
|
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
|
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
|
|
வேளிரொடு பொரீஇய, கழித்த
|
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
|
தலைமகன் பிரிவின்கண்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
மேல் |