தலைவன்
|
|
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
|
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
|
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
|
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
|
5
|
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
|
|
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
|
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
|
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
|
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
|
10
|
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
|
|
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
|
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
|
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
|
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என்
களைமா
|
15
|
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
|
|
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
|
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
|
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால்
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான்,
தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று
அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக்
கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன்,
பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார். |
|
உரை |
|
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
|
|
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
|
|
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,
|
|
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற
|
5
|
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்,
|
|
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,
|
|
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
|
|
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
|
|
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
|
10
|
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
|
|
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
|
|
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
|
|
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல்,
|
|
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
|
15
|
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம்
|
|
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு
|
|
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
|
|
அன்ன ஆக' என்னுநள் போல,
|
|
முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
|
20
|
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,
|
|
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
|
|
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
|
|
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
|
|
மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
|
25
|
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
|
|
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி
|
|
உழையம் ஆகவும் இனைவோள்
|
|
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே!
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும்
புழுகின்,
|
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
|
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
|
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,
|
5
|
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய்
|
|
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,
|
|
ஆலி வானின் காலொடு பாறி,
|
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,
|
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
|
10
|
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
|
|
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
|
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
|
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
|
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து,
|
15
|
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது,
|
|
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
|
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண்
|
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
|
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,
|
20
|
கன்று புகு மாலை நின்றோள் எய்தி,
|
|
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
|
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
|
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ
|
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
|
25
|
அம் தீம் கிளவிக் குறுமகள்
|
|
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?
|
வினைமுற்றி மீண்ட தலைமகன்
தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
உரை |
|
யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
|
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி
சிவப்ப,
|
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
|
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
|
5
|
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
|
|
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
|
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்
சினை,
|
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
|
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
|
10
|
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
|
|
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
|
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
|
|
நல் வரை நாட! நீ வரின்,
|
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.
|
பகற்குறி வாராநின்ற
தலைமகன் தோழியால் செறிப்பு
அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்'
என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. -
கபிலர்
|
|
உரை |
|
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
|
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
|
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
|
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து
இசைக்கும்
|
5
|
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
|
|
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
|
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
|
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
|
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
|
10
|
சேயிதழ் அனைய ஆகி, குவளை
|
|
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
|
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
|
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர்
அறல்
|
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
|
15
|
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
|
|
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
|
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
|
|
இயங்காது வதிந்த நம் காதலி
|
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
|
நெஞ்சினாற் பொருள்
வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன்,
தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக்
கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
|
|
உரை |
|
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
|
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
|
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
|
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
|
5
|
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
|
|
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
|
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
|
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
|
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
|
10
|
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
|
|
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
|
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
|
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
|
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
|
15
|
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
|
|
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
|
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
|
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
|
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
|
20
|
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
|
|
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
|
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
|
|
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
|
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
|
25
|
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,
|
|
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
|
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
|
பொருள் வலிக்கப்பட்டுப்
பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று
மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. -
காவன்முல்லைப் பூதனார்
|
|
உரை |
|
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
|
|
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
|
|
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
|
|
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
|
5
|
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,
|
|
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
|
|
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
|
|
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
|
|
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
|
10
|
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே,
|
|
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
|
|
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
|
|
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
|
|
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை
உதைப்பு,
|
15
|
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து,
|
|
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
|
|
இரவுத் துயில் மடிந்த தானை,
|
|
உரவுச் சின வேந்தன் பாசறையேமே.
|
தலைமகன் பருவங் கண்டு
சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர்
மூலங் கிழார்
|
|
உரை |
|
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
|
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
|
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
|
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
|
5
|
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
|
|
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
|
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
|
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
|
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
|
10
|
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய்
|
|
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
|
|
யாமே எமியம் ஆக, நீயே
|
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
|
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
|
15
|
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்
தோள்,
|
|
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
|
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
|
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
|
|
செய்வினை ஆற்றுற விலங்கின்,
|
20
|
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?
|
தலைமகன் இடைச்சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்
ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
|
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
|
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
|
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
|
5
|
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
|
|
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
|
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
|
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
|
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
|
10
|
செல்க, தேரே நல் வலம் பெறுந!
|
|
பசை கொல் மெல் விரல், பெருந் தோள்,
புலைத்தி
|
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
|
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
|
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
|
15
|
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர்
திறத்து' என,
|
|
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
|
|
மழலை இன் சொல் பயிற்றும்
|
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகனார்
|
|
உரை |
|
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்
படர்ந்து,
|
|
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
|
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
|
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
|
5
|
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
|
|
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
|
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
|
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
|
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
|
10
|
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
|
|
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
|
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங்
காட்டு,
|
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால்
பட்டென,
|
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
|
15
|
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப்
|
|
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
|
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
|
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
|
|
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
|
20
|
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின்
|
|
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
|
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
|
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
|
|
ஏற்று ஏக்கற்ற உலமரல்
|
25
|
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே!
|
பொருள் முற்றிய தலைமகன்
தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச்
செங்கண்ணனார்
|
|
உரை |
|
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
|
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
|
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
|
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
|
5
|
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
|
|
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
|
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
|
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
|
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
|
10
|
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
|
|
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
|
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
|
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
|
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
|
15
|
அம் கலுழ் மாமை கிளைஇய,
|
|
நுண் பல் தித்தி, மாஅயோளே?
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து
சொல்லியது. - குன்றியனார்
|
|
உரை |
|
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
|
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
|
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
|
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
|
5
|
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
|
|
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
|
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
|
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
|
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
|
10
|
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,
|
|
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
|
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
|
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று
|
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
|
15
|
இன் துணைப் பிரியும் மடமையோரே!
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-
மதுரையாசிரியர் நல்லந்துவனார்
|
|
உரை |
|
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
|
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
|
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
|
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
|
5
|
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
|
|
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
|
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
|
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
|
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
|
10
|
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
|
|
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
|
|
கண்டது நோனானாகி, திண் தேர்க்
|
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
|
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
|
15
|
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
|
|
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
|
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
|
|
தண் குடவாயில் அன்னோள்
|
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
உரை |
|
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
|
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
|
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
|
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
|
5
|
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
|
|
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன்
இயைந்து,
|
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
|
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
|
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
|
10
|
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
|
|
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
|
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
|
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
|
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள்
எய்தி,
|
15
|
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
|
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
|
|
வேய் புரை பணைத் தோள், பாயும்
|
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.
|
தலைமகன் இடைச் சுரத்து
அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. -
ஆலம்பேரி சாத்தனார்
|
|
உரை |
|
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
|
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
|
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
|
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
|
5
|
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி
|
|
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
|
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
|
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
|
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
|
10
|
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,
|
|
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
|
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
|
|
மனைமுதல் வினையொடும் உவப்ப,
|
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.
|
பொருள்வயிற் பிரிவு
கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன்
சொல்லியது.- பெருந்தேவனார்
|
|
உரை |
|
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
|
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
|
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
|
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
|
5
|
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
|
|
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
|
|
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
|
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
|
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
|
10
|
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்
|
|
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
|
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை,
|
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
|
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
|
15
|
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர்
|
|
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
|
|
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
|
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
|
|
வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
|
20
|
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி
பயிற்றி,
|
|
திதலை அல்குல் எம் காதலி
|
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.
|
வினை முடித்து மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர்
கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
|
|
உரை |
|
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
|
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
|
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
|
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
|
5
|
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
|
|
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
|
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
|
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
|
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
|
10
|
யாமே எமியம்ஆக, தாமே
|
|
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
|
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
|
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
|
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
15
|
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,
|
|
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
|
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது
அழிந்து,
|
|
பானாட் கங்குலும் பகலும்
|
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.-
நக்கீரர்
|
|
உரை |
|
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
|
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்
வாய்,
|
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
|
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
|
5
|
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
|
|
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
|
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
|
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
|
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
|
10
|
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,
|
|
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
|
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற்
|
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
|
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
|
15
|
கடவுள் எழுதிய பாவையின்,
|
|
மடவது மாண்ட மாஅயோளே.
|
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
களையும் இடனால் பாக! உளை அணி
|
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
|
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
|
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
|
5
|
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
|
|
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
|
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
|
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின்,
|
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
|
10
|
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,
|
|
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
|
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
|
|
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
|
15
|
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை
|
|
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
|
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு
கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
|
|
உரை |
|
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
|
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
|
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
|
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
|
5
|
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
|
|
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
|
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
|
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
|
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
|
10
|
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
|
|
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
|
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
|
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
|
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
|
15
|
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
|
|
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
|
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
|
|
திருந்துஇலை எஃகம் போல,
|
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.
|
தலைமகன் பிரியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.-
மருதன் இள நாகனார்
|
|
உரை |
|
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
|
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
|
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
|
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
|
5
|
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
|
|
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
|
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
|
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
|
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
|
10
|
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
|
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
|
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
|
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
|
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
|
15
|
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
|
|
கல் பிறங்கு அத்தம் போகி,
|
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
உரை |
|
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
|
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
|
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
|
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி
சிறந்து,
|
5
|
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு
பிளந்து,
|
|
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
|
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
|
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
|
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி
|
10
|
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,
|
|
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
|
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
|
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
|
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்
|
|
உரை |
|
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
|
|
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
|
|
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
|
|
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
|
5
|
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
|
|
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
|
|
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
|
|
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
|
|
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
|
10
|
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,
|
|
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
|
|
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
|
|
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
|
|
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
|
15
|
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்
சிறந்து,
|
|
வினைவயின் பெயர்க்கும் தானை,
|
|
புனைதார், வேந்தன் பாசறையேமே!
|
தலைமகன் பாசறையிலிருந்து
சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
|
|
உரை |
|
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
|
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
|
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
|
|
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
|
5
|
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
|
|
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
|
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
|
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
|
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
|
10
|
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
|
|
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
|
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
|
|
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
|
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
|
15
|
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
|
|
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
|
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
|
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
|
|
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
|
20
|
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
|
|
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
|
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
|
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
|
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
|
25
|
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
|
|
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
|
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
|
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
|
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
|
30
|
மடம் கொள் மதைஇய நோக்கின்,
|
|
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.
|
வாயில் மறுத்த தோழிக்குத்
தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி
இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது
சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர்
கிழார்
|
|
உரை |
|
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
|
|
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
|
|
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
|
|
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
|
5
|
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்
|
|
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
|
|
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
|
|
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
|
|
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
|
10
|
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,
|
|
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால்
|
|
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
|
|
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல்
நகர்ச்
|
|
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
|
15
|
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
|
|
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.- மதுரைப் பேராலவாயார்
|
|
உரை |
|
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
|
|
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
|
|
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்
சிறந்து;
|
|
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
|
5
|
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
|
|
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
|
|
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
|
|
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
|
|
வாடா வேம்பின், வழுதி கூடல்
|
10
|
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
|
|
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
|
|
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
|
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
|
|
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
|
15
|
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
|
|
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
|
|
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
|
|
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
|
|
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
|
20
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
|
|
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
|
|
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
|
|
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
|
வினை முற்றி மீளலுறும்
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - கணக்காயனார் மகனார்
நக்கீரனார்
|
|
உரை |
|
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
|
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
|
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
|
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
|
5
|
|
|
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
|
|
ஐது படு கொள்ளி அங்கை காய,
|
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
|
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
|
10
|
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
|
|
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து
இசைக்கும்
|
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
|
|
ஆர்வம் சிறந்த சாயல்,
|
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன்
பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச்
சிறு மேதாவியார்
|
|
உரை |
|
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
|
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
|
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
|
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
|
5
|
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
|
|
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
|
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
|
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
|
|
அணங்குடை நகரின் மணந்த பூவின்
|
10
|
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
|
|
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
|
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
|
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
|
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
|
உடன்போகிய தலைமகளைத்
தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
|
|
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
|
|
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
|
|
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
|
5
|
காடு கால்யாத்த நீடு மரச் சோலை
|
|
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
|
|
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
|
|
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
|
|
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
|
10
|
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,
|
|
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
|
|
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
|
|
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
|
|
அறன் இல் வேந்தன் ஆளும்
|
15
|
வறன் உறு குன்றம் பல விலங்கினவே.
|
இடைச் சுரத்துத் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக்
காவினார்
|
|
உரை |
|
'கேளாய், எல்ல! தோழி! வேலன்
|
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
|
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
|
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
|
5
|
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
|
|
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என,
|
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க,
|
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்
|
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
|
10
|
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்
|
|
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
|
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
|
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்,
|
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
|
15
|
அணங்கு சால், அரிவையைக் காண்குவம்
|
|
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - .......
|
|
உரை |
|
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
|
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
|
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
|
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
|
5
|
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
|
|
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
|
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
|
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
|
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
|
10
|
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.
|
|
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
|
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
|
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
|
|
அளியள்தான், நின் அளி அலது இலளே!
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும்
பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
|
|
உரை |
|
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
|
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
|
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
|
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
|
5
|
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
|
|
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
|
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
|
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
|
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
|
10
|
தான் வரும் என்ப, தட மென் தோளி
|
|
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
|
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
|
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
|
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
|
15
|
கரு முக முசுவின் கானத்தானே.
|
தோழியால் தலைமகளை
உடன்வரும் எனக் கேட்ட தலைமகன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகன்
|
|
உரை |
|
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
|
|
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
|
|
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
|
|
கான யானை கவின் அழி குன்றம்
|
5
|
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
|
|
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
|
|
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
|
|
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
|
|
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
|
10
|
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
|
|
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
|
|
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
|
|
பெருங் கடல் ஓதம் போல,
|
|
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -
காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக்
கண்ணனார்
|
|
உரை |
|
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
|
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர்,
வழிமொழிந்து
|
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
|
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
|
5
|
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.
|
|
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
|
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
|
|
பாசறை வருத்தம் வீட, நீயும்
|
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
|
10
|
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி,
|
|
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
|
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
|
|
காலை எய்த, கடவுமதி மாலை
|
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
|
15
|
அரமிய வியலகத்து இயம்பும்
|
|
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.
|
தலைமகன் தேர்ப்பாகற்கு
உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
உரை |
|
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
|
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
|
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
|
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
|
5
|
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
|
|
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
|
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
|
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
|
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
|
10
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
|
|
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
|
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
|
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
|
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
|
15
|
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
|
|
திதியனொடு பொருத அன்னி போல
|
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
|
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
|
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
|
20
|
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
|
|
மின் நேர் மருங்குல், குறுமகள்
|
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம்
ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
நக்கீரர்
|
|
உரை |
|
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
|
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ
|
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை
|
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை,
|
5
|
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
|
|
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன்
|
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,
|
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
|
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்
|
10
|
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும்
|
|
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை
|
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்
|
|
போது புறங்கொடுத்த உண்கண்
|
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.
|
கழறிய பாங்கற்குத் தலைமகன்
கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார்
|
|
உரை |
|
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
|
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
|
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
|
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
|
5
|
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என
|
|
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
|
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
|
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
|
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
|
10
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
|
|
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
|
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
|
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு
|
|
வருக' என்னுதிஆயின்,
|
15
|
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை
மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
|
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
|
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
|
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
|
5
|
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
|
|
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
|
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
|
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
|
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
|
10
|
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
|
|
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
|
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
|
|
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
|
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
|
வினை முற்றி மீண்ட தலைமகன்
பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
|
|
உரை |
|
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண்
சோறு
|
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
|
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
|
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
|
5
|
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
|
|
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
|
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
|
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
|
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
|
10
|
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
|
|
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
|
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
|
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
|
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
|
15
|
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
|
|
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
|
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
|
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
|
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
|
20
|
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
|
|
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி
வியர்
|
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
|
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
|
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
|
25
|
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
|
|
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
|
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
|
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
|
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார்
|
|
உரை |
|
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
|
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
|
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
|
|
என்றூழ் விடர குன்றம் போகும்
|
5
|
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
|
|
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
|
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
|
|
சேரி விலைமாறு கூறலின், மனைய
|
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
|
10
|
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
|
|
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
|
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
|
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை
|
|
கை பூண் பகட்டின் வருந்தி,
|
15
|
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.
|
இயற்கைப் புணர்ச்சி
புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு
உரைத்தது.- அம்மூவனார்
|
|
உரை |
|
இலமலர் அன்ன அம் செந் நாவின்
|
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
|
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
|
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
|
5
|
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
|
|
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
|
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
|
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
|
|
கறை அடி யானை நன்னன் பாழி,
|
10
|
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
|
|
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
|
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
|
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
|
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
|
15
|
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
|
|
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
|
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
|
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
|
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
|
20
|
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
|
|
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
|
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
|
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
|
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு
உறைப்ப,
|
25
|
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;
|
|
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
உரை |
|
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன;
|
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
|
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
|
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
|
5
|
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,
|
|
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
|
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச்
|
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
|
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
|
10
|
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல
|
|
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
|
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
|
|
கடாஅ யானை கொட்கும் பாசறை,
|
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
|
15
|
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி,
|
|
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
|
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
|
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
|
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
|
வினை முற்றிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச்
சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார்
மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
|
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
|
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
|
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
|
5
|
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
|
|
அரிது செய் விழுப் பொருள் எளிதினின்
பெறினும்
|
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
|
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
|
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
|
10
|
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
|
|
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
|
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
|
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
|
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
|
15
|
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
|
|
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
|
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
|
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
|
|
உரை |
|
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
|
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
|
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
|
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
|
5
|
சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,
|
|
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்
துறை,
|
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
|
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
|
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
|
10
|
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,
|
|
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
|
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
|
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
|
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
|
15
|
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி
|
|
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
|
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
|
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
|
|
வல்லினும், வல்லார்ஆயினும்,
சென்றோர்க்குச்
|
20
|
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
|
|
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
|
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
|
|
வேய் அமைக் கண் இடை புரைஇ,
|
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.-பரணர்
|
|
உரை |
|
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
|
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
|
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
|
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
|
5
|
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
|
|
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
|
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
|
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
|
|
காமர் துணையொடு ஏமுற வதிய,
|
10
|
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
|
|
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
|
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
|
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
|
|
நம் வயிற் புரிந்த கொள்கை
|
15
|
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற்
புல்லாளங்கண்ணியார்
|
|
உரை |
|
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
|
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
|
|
கடல் கண்டன்ன மாக விசும்பின்
|
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
|
5
|
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி,
|
|
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
|
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
|
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
|
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக;
|
10
|
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என
|
|
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்,
|
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல்,
|
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
|
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
|
15
|
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது,
|
|
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
|
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
|
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
|
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
|
20
|
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,
|
|
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
|
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
|
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
|
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
|
25
|
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே.
|
இரவுக் குறிக்கண் தலைமகளைத்
கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
|
|
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
|
|
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
|
|
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
|
5
|
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்
|
|
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
|
|
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
|
|
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
|
|
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
|
10
|
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்
|
|
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
|
|
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
|
|
கந்து கால் ஒசிக்கும் யானை,
|
|
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!
|
பாசறைக்கண் இருந்த தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத்
தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
|
|
உரை |
|
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
|
|
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
|
|
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
|
|
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
|
5
|
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப்
|
|
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
|
|
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
|
|
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
|
|
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
|
10
|
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,
|
|
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
|
|
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
|
|
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
|
|
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
|
15
|
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
|
|
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
|
|
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
|
|
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
|
|
கூர் முகச் சிதலை வேய்ந்த
|
20
|
போர் மடி நல் இறைப் பொதியிலானே?
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு
அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார்
|
|
உரை |
|
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
|
|
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை,
|
|
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
|
|
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
|
5
|
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்
|
|
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
|
|
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக்
கூட்டும்
|
|
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
|
|
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
|
10
|
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை
|
|
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
|
|
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
|
|
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
|
|
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச்
சாத்தனார்
|
|
உரை |
|
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
|
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
|
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என,
|
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
|
5
|
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை
|
|
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
|
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
|
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
|
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
|
10
|
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை
|
|
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
|
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
|
|
நல் மணல் வியலிடை நடந்த
|
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
|
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
|
|
வீ ததை கானல் வண்டல் அயர,
|
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
|
5
|
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை
|
|
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
|
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
|
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
|
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
|
10
|
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன்
|
|
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
|
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
|
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப்
|
|
பொன் நேர் நுண் தாது நோக்கி,
|
15
|
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.
|
இரந்து பின்னின்ற
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி
தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க்
கண்ணம்பாளனார்
|
|
உரை |
|
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
|
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
|
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
|
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
|
5
|
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
|
|
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
|
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
|
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
|
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
|
|
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
|
|
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
|
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
|
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
|
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
|
15
|
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
|
|
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
|
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
|
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
|
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
|
20
|
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
|
|
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
|
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
|
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
|
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
|
25
|
அணங்குசால், அரிவை இருந்த
|
|
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
|
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
|
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
|
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
|
5
|
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
|
|
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
|
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து
அவர்
|
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
|
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
|
10
|
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
|
|
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
|
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
|
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
|
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
|
15
|
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
|
|
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
|
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக்
கந்தரத்தனார்
|
|
உரை |
|
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
|
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
|
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
|
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
|
5
|
பொறித்த போலும் வால் நிற எருத்தின்,
|
|
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
|
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
|
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
|
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
|
10
|
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
|
|
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
|
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
|
|
முருந்து ஏர் முறுவல், இளையோள்
|
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.
|
பொருள் வலித்த
நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக்
|
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது,
|
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
|
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
|
5
|
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை
|
|
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
|
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
|
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
|
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
|
10
|
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,
|
|
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
|
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
|
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
|
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
|
15
|
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்,
|
|
ஏர் மலர் நிறை சுனை உறையும்
|
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே!
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது
போக்கு நோக்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
|
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
|
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
|
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
|
5
|
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்
|
|
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
|
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
|
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
|
|
|
10
|
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
|
|
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
|
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
|
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல்
|
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும்
|
15
|
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
|
|
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
|
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
|
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
|
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
|
20
|
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
|
|
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
|
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
|
|
இழந்த நாடு தந்தன்ன
|
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
உரை |
|
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
|
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி
|
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
|
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
|
5
|
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
|
|
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
|
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
|
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
|
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
|
10
|
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
|
|
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
|
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
|
|
தண்டலை கமழும் கூந்தல்,
|
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
காமக்கணி நப்பாலத்தனார்
|
|
உரை |
|
யாம இரவின் நெடுங் கடை நின்று,
|
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
|
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
|
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
|
5
|
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
|
|
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
|
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
|
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
|
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள்
ஒருங்கு
|
10
|
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
|
|
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
|
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
|
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
|
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
|
15
|
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
|
|
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
|
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
|
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
|
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
|
20
|
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
|
|
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
|
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
|
|
கார் மலர் கடுப்ப நாறும்,
|
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே!
|
புணர்ந்து நீங்கும் தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
தா இல் நல் பொன் தைஇய பாவை
|
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
|
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
|
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
|
5
|
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,
|
|
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
|
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
|
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
|
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
|
10
|
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,
|
|
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
|
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
|
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
|
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
|
15
|
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
|
|
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க்
குட்டுவன்
|
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
|
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
|
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
|
20
|
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
|
|
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
|
|
எளியள் அல்லோட் கருதி,
|
|
அல்லகுறிப்பட்டு நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லியது. -பரணர்
|
|
உரை |
|
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
|
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
|
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
|
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
|
5
|
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
|
|
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
|
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
|
|
அமரும் நம் வயினதுவே; நமர் என
|
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
|
10
|
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
|
|
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
|
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
|
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
|
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
|
15
|
மாரி மாலையும் தமியள் கேட்டே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன்
பேரி சாத்தனார்
|
|
உரை |
|
செல்க, பாக! எல்லின்று பொழுதே
|
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
|
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
|
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
|
5
|
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி,
|
|
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
|
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
|
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
|
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
|
10
|
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,
|
|
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
|
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
|
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
|
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
|
15
|
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என,
|
|
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
|
|
அருங் கடி வியல் நகர் நோக்கி,
|
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர்
மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்
சாத்தனார்
|
|
உரை |
|
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
|
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
|
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
|
|
இன்றே இவணம் ஆகி, நாளை,
|
5
|
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
|
|
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
|
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார்
கோல்
|
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
|
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
|
10
|
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
|
|
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
|
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
|
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
|
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
|
15
|
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
செறி தொடி முன்கை, நம் காதலி
|
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
உரை |
|
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
|
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
|
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
|
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
|
5
|
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!
|
|
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
|
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
|
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
|
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
|
10
|
தீதும் உண்டோ, மாதராய்?' என,
|
|
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
|
|
கை வல் பாகன் பையென இயக்க,
|
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
|
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
|
15
|
சிறிய இறைஞ்சினள், தலையே
|
|
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
உரை |
|
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
|
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
|
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
|
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
|
5 |
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
|
|
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
|
|
கால் என மருள, ஏறி, நூல் இயல்
|
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
|
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
|
10
|
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை
|
|
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
|
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
|
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
|
|
எல்லை போகிய புல்லென் மாலை,
|
15
|
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,
|
|
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
|
|
நல் நிறம் பரந்த பசலையள்
|
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - பேயனார்
|
|
உரை |
|
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
|
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
|
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
|
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
|
5
|
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
|
|
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
|
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
|
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
|
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
|
10
|
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
|
|
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
|
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
|
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
|
|
நெருநலும் தீம் பல மொழிந்த
|
15
|
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
உரை |
|
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
|
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
|
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
|
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
|
5
|
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை
|
|
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
|
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
|
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன்
|
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
|
10
|
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப்
|
|
பாணன் வந்தனன், தூதே; நீயும்
|
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
|
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
|
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை.......மள்ளனார்
|
|
உரை |
|
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
|
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
|
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
|
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
|
5
|
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,
|
|
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
|
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
|
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
|
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
|
10
|
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்
|
|
கான யானை வெண் கோடு சுட்டி,
|
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
|
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
|
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
|
15
|
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
|
|
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
|
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
|
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
|
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
|
20
|
அம் மா அரிவை ஒழிய,
|
|
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
|
|
செம் முது செவிலியர் பல பாராட்ட,
|
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
|
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
|
5
|
மனை உறை புறவின் செங் காற் சேவல்
|
|
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
|
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
|
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
|
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
|
10
|
|
|
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
|
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
|
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
|
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
|
15
|
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
|
|
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
|
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
|
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
|
|
தார் மணி மா அறிவுறாஅ,
|
20
|
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!
|
வினை முற்றி வந்து எய்திய
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
உரை |
|
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
|
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
|
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
|
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
|
5
|
பொம்மல் ஓதி பொதுள வாரி,
|
|
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
|
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
|
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
|
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
|
10
|
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
|
|
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
|
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
|
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
|
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
|
15
|
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
|
|
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
|
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
|
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
|
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
|
20
|
வெள் அரா மிளிர வாங்கும்
|
|
பிள்ளை எண்கின் மலைவயினானே.
|
உடன் போகாநின்ற
தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர்
மருத்துவன் தாமோதரனார்
|
|
உரை |
|
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
|
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
|
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும்,
அன்னோட்
|
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
|
5
|
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
|
|
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
|
|
மாய இருள் அளை மாய் கல் போல,
|
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
|
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
|
10
|
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
|
|
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
|
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
|
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
|
|
காமம் கைம்மிக உறுதர,
|
15
|
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!
|
அல்லகுறிப்பட்டுப்
பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பரணர்
|
|
உரை |
|
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
|
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
|
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
|
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
|
5
|
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச்
|
|
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
|
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
|
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
|
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
|
10
|
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,
|
|
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
|
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
|
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
|
|
வில்லோர் குறும்பில் ததும்பும்,
|
15
|
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.
|
புணர்ந்து உடன் போயின காலை,
இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த
காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
|
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
|
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
|
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
|
5
|
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து,
அருளாது,
|
|
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
|
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
|
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
|
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
|
10
|
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
|
|
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
|
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
|
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
|
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
|
15
|
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
|
|
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
|
|
கொண்டல் மா மலை நாறி,
|
|
அம் தீம் கிளவி வந்தமாறே.
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப்
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
|
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
|
|
பருவம் செய்த பானாட் கங்குல்,
|
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
|
5
|
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
|
|
திண் கால் உறியன், பானையன், அதளன்,
|
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
|
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
|
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
|
10
|
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
|
|
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
|
|
தண் நறு புறவினதுவே நறு மலர்
|
|
முல்லை சான்ற கற்பின்
|
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - இடைக் காடனார்
|
|
உரை |
|
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
|
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
|
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
|
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
|
5
|
மென் முலை முற்றம் கடவாதோர்' என,
|
|
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
|
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
|
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
|
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
|
10
|
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை
|
|
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
|
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
|
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
|
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
|
15
|
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,
|
|
கையறு நெஞ்சினள், அடைதரும்
|
|
மை ஈர் ஓதி மாஅயோளே?
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன்
செங்கண்ணனார்
|
|
உரை |
|
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
|
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
|
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
|
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
|
5
|
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை
கொடுப்பினும்,
|
|
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
|
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
|
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
|
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
|
10
|
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம்,
இருப்பின்,
|
|
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
|
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
|
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
|
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பட்டுப்
போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், -
அம்மூவனார்
|
|
உரை |
|
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
|
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
|
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
|
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
|
5
|
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,
|
|
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
|
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
|
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
|
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
|
10
|
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
|
|
காமர் புறவினதுவே காமம்
|
|
நம்மினும் தான் தலைமயங்கிய
|
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
இடைக்காடனார்
|
|
உரை |
|
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
|
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
|
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
|
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
|
5
|
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்
|
|
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
|
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
|
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
|
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
|
10
|
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,
|
|
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
|
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
|
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
|
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -
குடவாயிற்கீரத்தனார்
|
|
உரை |
|
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
|
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
|
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
|
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
|
5
|
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
|
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
|
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
|
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
|
10
|
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
|
|
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத்
தெறிப்ப,
|
|
மை அற விரிந்த படை அமை சேக்கை
|
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
|
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
|
15
|
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
|
|
'நல்ல கூறு' என நடுங்கி,
|
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
உரை |
|
வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
|
|
உலறி இலை இலவாக, பல உடன்
|
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
|
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
|
5
|
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப்
|
|
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
|
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப்
பரல்,
|
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
|
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
|
10
|
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த்
|
|
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
|
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
|
|
உவலை சூடிய தலையர், கவலை
|
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின்,
யாவதும்
|
15
|
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர
|
|
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள்
காய்
|
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
|
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
|
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
|
20
|
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம்
|
|
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
|
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
|
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி
|
25
|
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண்
கவினே.
|
பொருள்வயிற் போகாநின்ற
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
|
உரை |
|
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
|
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
|
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
|
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
|
5
|
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி,
|
|
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
|
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
|
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
|
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
|
10
|
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
|
|
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
|
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
|
|
எழுதியன்ன கொடி படு வெருகின்
|
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
|
15
|
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்
|
|
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
|
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
|
|
வெரு வரு கானம், நம்மொடு,
|
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
|
பொருள்வயிற் போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
|
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
|
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
|
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
|
|
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை
|
|
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
|
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
|
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
|
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
|
10
|
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு
உரைத்தென,
|
|
வைகு நிலை மதியம் போல, பையென,
|
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
|
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
|
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
|
15
|
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,
|
|
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
|
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
|
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல்
மாண்டு
|
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
|
20
|
பருவரல் எவ்வமொடு அழிந்த
|
|
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.
|
இடைச் சுரத்துப் போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
-எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
உரை |
|
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
|
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
|
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
|
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
|
5
|
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
|
|
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
|
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
|
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
|
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
|
10
|
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
|
|
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
|
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
|
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
|
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
|
15
|
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
|
|
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
|
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
|
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
|
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
|
20
|
நம் நோய் தன்வயின் அறியாள்,
|
|
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
|
|
உரை |
|
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
|
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
|
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
|
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
|
5
|
பாம்பு எறி கோலின் தமியை வைகி,
|
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
|
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
|
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
|
10
|
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
|
|
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
|
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
|
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
|
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
|
15
|
புகல் அரும், பொதியில் போலப்
|
|
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!
|
அல்லகுறிப்பட்டுப் போகின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
உரை |
|
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
|
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
|
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
|
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
|
5
|
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால்
வீழ்த்து,
|
|
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
|
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
|
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
|
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
|
10
|
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
|
|
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
|
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
|
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
|
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
|
15
|
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
|
|
பொலிவன அமர்த்த உண்கண்,
|
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
கூத்தனார்
|
|
உரை |
|
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
|
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
|
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
|
|
|
5
|
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
|
|
இன்னா வேனில் இன் துணை ஆர,
|
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
|
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
|
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
|
10
|
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
|
|
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
|
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
|
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து
யாத்த
|
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
|
15
|
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
|
|
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
|
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
|
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
|
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
|
20
|
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
|
|
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
|
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
|
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
|
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
|
25
|
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
|
|
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு
அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
|
|
உரை |
|
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
|
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
|
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
|
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
|
5
|
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
|
|
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
|
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
|
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
|
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
|
10
|
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
|
|
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
|
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
|
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
|
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
|
15
|
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
|
|
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
|
|
கள்ளி நீழல் கதறுபு வதிய,
|
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
|
|
எமியம் கழிதந்தோயே பனி இருள்
|
20
|
பெருங் கலி வானம் தலைஇய
|
|
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
|
முன்னொரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன்
பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச்
சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
|
|
மறம் கெழு தானை அரசருள்ளும்,
|
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
|
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி
தோள்,
|
5
|
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
|
|
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
|
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
|
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
|
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
|
10
|
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
|
|
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
|
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
|
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
|
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
|
15
|
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
|
|
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
|
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
|
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
|
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி
பாக்கத்து,
|
20
|
வழங்கல் ஆனாப் பெருந் துறை
|
|
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
உரை |
|
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
|
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு
யான்
|
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
|
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
|
5
|
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
|
|
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
|
|
ஏவல் இளையர் தலைவன், மேவார்
|
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
|
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
|
10
|
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
|
|
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
|
|
வரையரமகளிரின் அரியள்,
|
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
உரை |
|
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்
தோள்,
|
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
|
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
|
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
|
5
|
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
|
|
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
|
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
|
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
|
10
|
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,
|
|
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
|
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
|
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக்
களைந்த
|
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
|
15
|
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து
நின்று
|
|
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
|
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
|
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
|
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக்
கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை
மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
|
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
|
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
|
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
|
5
|
கை மாண் தோணி கடுப்ப, பையென,
|
|
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
|
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
|
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
|
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
|
10
|
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
|
|
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
|
|
பயப்புறு படர் அட வருந்திய
|
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
|
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
|
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
|
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
|
5
|
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
|
|
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
|
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
|
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
|
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
|
10
|
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
|
|
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
|
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத்
தெறிப்ப,
|
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
|
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
|
15
|
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
|
|
உள்ளுதொறு படூஉம் பல்லி,
|
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
|
பொருள் முற்றி
மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்
|
|
உரை |
|
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
|
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
|
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
|
|
நாளது செலவும், மூப்பினது வரவும்,
|
5
|
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
|
|
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
|
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
|
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
|
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
|
10
|
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
|
|
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
|
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
|
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
|
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
|
15
|
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
|
|
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
|
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
|
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
|
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
|
20
|
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
|
|
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
|
|
நம்மொடு நன் மொழி நவிலும்
|
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
|
முன் ஒரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள்
முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள்
கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
|
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
|
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
|
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
|
5
|
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
|
|
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
|
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
|
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
|
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
|
10
|
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
|
|
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
|
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
|
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
|
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
|
15
|
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
|
|
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - எயினந்தை மகனார்
இளங்கீரனார்
|
|
உரை |
|
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
|
|
சினவல் போகிய புன்கண் மாலை,
|
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த
|
5
|
கான யானைக் கதுவாய் வள் உகிர்,
|
|
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
|
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
|
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
|
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
|
10
|
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
|
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
|
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
|
|
தண் கமழ் புது மலர் நாறும்
|
15
|
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே.
|
தலைமகன் இடைச் சுரத்து நின்று
சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
|
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
|
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
|
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
|
5
|
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
|
|
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய்
கூர்ந்து,
|
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
|
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
|
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
|
10
|
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
|
|
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
|
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
|
|
வீ தேர் பறவை விழையும்
|
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
உரை |
|
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
|
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
|
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
|
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
|
5
|
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு
நினைந்து,
|
|
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
|
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
|
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
|
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
|
10
|
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
|
|
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
|
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
|
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
|
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
|
15
|
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து,
|
|
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
|
அல்லகுறிப்பட்டுப்
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர்
எழுந்து,
|
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
|
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
|
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
|
5
|
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,
|
|
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
|
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
|
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
|
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
|
10
|
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,
|
|
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
|
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
|
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
|
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார்
அரிப் பனி
|
15
|
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்
|
|
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
|
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
|
|
ஓர் எயில் மன்னன் போல,
|
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பாண்டியன் ஏனாதி
நெடுங்கண்ணனார்
|
|
உரை |
|
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
|
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
|
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
|
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
|
5
|
தாழ்ந்த போல நனி அணி வந்து,
|
|
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
|
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
|
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
|
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
|
10
|
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,
|
|
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
|
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
|
|
மணி மண்டு பவளம் போல, காயா
|
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
|
15
|
கார் கவின் கொண்ட காமர் காலை,
|
|
செல்க, தேரே நல் வலம் பெறுந!
|
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
|
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!
|
பாசறை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
இடைக்காடனார்
|
|
உரை |
|
கோடை நீடலின், வாடு புலத்து உக்க
|
|
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
|
|
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
|
|
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
|
5
|
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,
|
|
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
|
|
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
|
|
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
|
|
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
|
10
|
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்
|
|
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
|
|
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
|
|
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
|
|
நசை தர வந்தோர் இரந்தவை
|
15
|
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே!
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
|
|
உரை |
|
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
|
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
|
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள்
புரிந்து,
|
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
|
5
|
நினையினைஆயின், எனவ கேண்மதி!
|
|
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
|
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
|
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
|
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
|
10
|
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,
|
|
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
|
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
|
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள்
சேர்பு,
|
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
|
15
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின்
|
|
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
|
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
|
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
|
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
|
20
|
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,
|
|
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
|
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
|
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு
நின்று,
|
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
|
25
|
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த
|
|
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
|
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?
|
முன் ஒரு காலத்துப் பொருள்
முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. -
பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
|
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
|
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
|
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
|
5
|
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர்
மண்டிலம்
|
|
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
|
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
|
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
|
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
|
10
|
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
|
|
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
|
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
|
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
|
|
முனை அரண் கடந்த வினை வல் தானை,
|
15
|
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
|
|
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
|
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது
உயிர்த்து,
|
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
|
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
|
20
|
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
இளங்கௌசிகனார்
|
|
உரை |
|
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
|
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
|
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
|
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
|
5
|
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,
|
|
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
|
|
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
|
|
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
|
|
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
|
10
|
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
|
|
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
|
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
|
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
|
|
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
|
15
|
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
|
|
சில் நிரை வால் வளைப் பொலிந்த
|
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!
|
தலைமகன் பாங்கற்குச்
சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம்
ஆம். - அம்மூவனார்
|
|
உரை |
மேல் |