தலைமகள்
|
|
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
|
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
|
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
|
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
|
5
|
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
|
|
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
|
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
|
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய்
நாட்டுப்
|
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
|
10
|
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
|
|
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
|
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
|
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
|
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
|
15
|
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
|
|
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
|
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
|
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
|
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
|
பிரிவிடை ஆற்றாளாய
தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்
|
|
உரை |
|
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
|
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
|
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
|
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
|
5
|
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய
|
|
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
|
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
|
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
|
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
|
10
|
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய,
|
|
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
|
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
|
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
|
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
|
15
|
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
|
|
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
|
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
|
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய்த்
தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்.
|
|
உரை |
|
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
|
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம்
காட்டு,
|
|
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
|
|
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
|
5
|
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
|
|
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
|
|
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
|
|
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான்
யாற்றுப்
|
|
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
|
10
|
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
|
|
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
|
|
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
|
|
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
|
|
அழுதல் மேவல ஆகி,
|
15
|
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு
கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள்,
'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. -
ஒளவையார்
|
|
உரை |
|
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
|
|
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
|
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
|
|
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
|
5
|
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
|
|
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
|
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
|
|
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
|
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
|
10
|
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
|
|
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச்
செல்லேன்,
|
|
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
|
|
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
|
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ
|
15
|
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
|
|
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
|
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
|
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
|
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?
|
பரத்தையர் சேரியினின்றும்
வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்'
என்றாற்குத் தலைமகள் சொல்லியது. -
சாகலாசனார்
|
|
உரை |
|
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
|
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
|
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
|
|
இது என அறியா மறுவரற் பொழுதில்,
|
5
|
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
|
|
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
|
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
|
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
|
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
|
10
|
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
|
|
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
|
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
|
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
|
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
|
15
|
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
|
|
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
|
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
|
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்
மலிந்து,
|
|
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
|
20
|
நோய் தணி காதலர் வர, ஈண்டு
|
|
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
|
வரைவிடை வைத்துப் பிரிந்த
காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை
இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட
மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து
சிறைப்புறத்தானாக, தோழியாற்
சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார்.
|
|
உரை |
|
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
|
|
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
|
|
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
|
|
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
|
5
|
காடே கம்மென்றன்றே; அவல,
|
|
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
|
|
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
|
|
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
|
|
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
|
10
|
அனையகொல் வாழி, தோழி! மனைய
|
|
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
|
|
மௌவல், மாச் சினை காட்டி,
|
|
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
|
|
உரை |
|
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
|
|
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
|
|
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
|
|
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
|
5
|
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
|
|
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
|
|
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
|
|
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
|
|
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
|
10
|
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று
|
|
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
|
|
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
|
|
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
|
|
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
|
15
|
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;
|
|
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
|
|
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
|
|
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
|
|
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
|
20
|
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
|
|
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
|
|
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
|
|
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
|
|
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
|
25
|
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
|
|
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
|
தலைமகன் தோழியை வாயில்
வேண்டி, அவளால் தான் வாயில்
பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய
தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - பாண்டியன்
கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
|
|
உரை |
|
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன்
தாள்,
|
|
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின்
|
|
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
|
|
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
|
5
|
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
|
|
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
|
|
மாவின் நறு வடி போல, காண்தொறும்
|
|
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
|
|
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
|
10
|
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்
|
|
தாழக் கூறிய தகைசால் நல் மொழி
|
|
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்
|
|
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
|
|
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
|
15
|
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
|
|
கொம்மை வாடிய இயவுள் யானை
|
|
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
|
|
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
|
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
|
20
|
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
|
|
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
|
|
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
|
|
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!
|
வினை முற்றி மீண்ட தலைமகன்,
'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற
தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்
|
|
உரை |
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
|
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
|
|
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
|
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
|
5
|
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
|
|
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
|
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
|
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
|
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
|
10
|
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
|
|
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
|
|
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
|
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
|
|
தமிழ் கெழு மூவர் காக்கும்
|
15
|
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்'
என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
மாமூலனார்
|
|
உரை |
|
நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
|
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
|
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
|
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
|
5
|
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
|
|
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
|
|
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
|
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
|
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
|
10
|
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
|
|
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
|
|
கடிய கூறி, கை பிணி விடாஅ,
|
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
|
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது
என்வயின்
|
15
|
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,
|
|
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன்
இன்றும்
|
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
|
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
|
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
|
20
|
என் குறைப் புறனிலை முயலும்
|
|
அண்கணாளனை நகுகம், யாமே.
|
பின்னின்ற தலைமகற்குக் குறை
நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக்
கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம்
ஆம்.- நல்வெள்ளியார்
|
|
உரை |
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
|
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து,
எழுந்து,
|
5
|
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
|
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
|
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
|
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
|
10
|
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
|
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
|
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
|
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
|
15
|
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
|
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
|
|
நார் அரி நறவின் எருமையூரன்,
|
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
|
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்,
என்று
|
20
|
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
|
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
|
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
|
தலைமகள் பரத்தையிற்
பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து
சொல்லியது. - மதுரை நக்கீரர்
|
|
உரை |
|
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
|
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
|
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
|
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
|
5
|
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
|
|
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
|
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
|
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
|
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
|
10
|
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங்
குடை,
|
|
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
|
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
|
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
|
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
|
15
|
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
|
|
மருதமர நிழல், எருதொடு வதியும்
|
|
காமர் வேனில்மன் இது,
|
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
|
தலைமகள் தோழிக்கு வன்புறை
எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய
தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று
மூதெயினனார்
|
|
உரை |
|
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
|
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
|
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
|
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
|
5
|
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
|
|
காடு இறந்தனரே, காதலர். மாமை,
|
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
|
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
10
|
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
|
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
|
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
|
|
ஆதிமந்தி போல, பேதுற்று
|
15
|
அலந்தனென் உழல்வென்கொல்லோ
பொலந்தார்,
|
|
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
|
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
|
|
உடை மதில் ஓர் அரண் போல,
|
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
|
|
உரை |
|
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
|
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும்
பொங்கர்ப்
|
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
|
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
|
5
|
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
|
|
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
|
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
|
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
|
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என
அன்னைக்கு
|
10
|
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என
|
|
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
|
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை
|
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள்
|
|
ஆய்மலர் உண்கண் பசலை
|
15
|
காம நோய்' எனச் செப்பாதீமே.
|
தலைமகள் வேறுபட்டமை அறிந்த
செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு
நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. -
நொச்சிநியமங் கிழார்
|
|
உரை |
|
அறியாய், வாழி தோழி! இருள் அற
|
|
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
|
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
|
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
|
5
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
|
|
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப்
பிணவொடு
|
|
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
|
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
|
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
|
10
|
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
|
|
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
|
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
|
|
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
|
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
|
15
|
பொருளே காதலர் காதல்;
|
|
'அருளே காதலர்' என்றி, நீயே.
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - சீத்தலைச்
சாத்தனார்
|
|
உரை |
|
நகை ஆகின்றே தோழி! நெருநல்
|
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
|
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
5
|
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
|
|
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
|
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
|
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
|
|
10
|
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
|
|
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்
இட்டு,
|
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
|
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
|
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
|
15
|
என்னும் தன்னும் நோக்கி,
|
|
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.
|
பரத்தை மனைக்குச்
செல்கின்ற பாணன் தன் மனைக்கு
வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
உரை |
|
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
|
|
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
|
|
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
|
|
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
|
5
|
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,
|
|
கூதிர், இல் செறியும் குன்ற நாட!
|
|
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
|
|
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
|
|
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
|
10
|
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
|
|
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
|
|
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
|
|
மனைமரம் ஒசிய ஒற்றிப்
|
|
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.
|
சேட்படுத்து வந்த
தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப்
பண்ட வாணிகன் இளந்தேவனார்
|
|
உரை |
|
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
|
|
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
|
|
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
|
|
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
|
5
|
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
|
|
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
|
|
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
|
|
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
|
|
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
|
10
|
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
|
|
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
|
|
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
|
|
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது,
|
|
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
|
15
|
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக்
|
|
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
|
|
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
|
|
தானே புகுதந்தோனே; யான் அது
|
|
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
|
20
|
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச்
சென்று
|
|
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
|
|
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
|
|
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
|
|
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
|
25
|
பழங் கணோட்டமும் நலிய,
|
|
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே.
|
பரத்தையிற் பிரிந்த
தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன்
கண்ணனார்
|
|
உரை |
|
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
|
|
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
|
|
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
|
|
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
|
5
|
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,
|
|
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
|
|
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
|
|
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
|
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
|
10
|
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
|
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
|
|
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
|
|
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
|
|
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
|
15
|
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு
|
|
நிலம் படு மின்மினி போல, பல உடன்
|
|
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
|
|
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!
|
பொருள்வயிற் பிரிந்தவழி
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - நோய்பாடியார்
|
|
உரை |
|
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம்
படப்பைத்
|
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
|
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
|
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
|
5
|
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
|
|
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
|
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
|
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
|
|
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
|
10
|
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
|
|
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
|
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த
நம்வயின்
|
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
|
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
|
15
|
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்
|
|
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
|
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
|
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
|
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
|
20
|
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்
|
|
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை
அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -
ஊட்டியார்
|
|
உரை |
|
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
|
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
|
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
|
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
|
5
|
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
|
|
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
|
|
ஆறே அரு மரபினவே; யாறே
|
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
|
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
|
10
|
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
|
|
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
|
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
|
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
|
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
|
15
|
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
|
|
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
|
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
|
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
|
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
|
20
|
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
|
|
ஆனா அரும் படர் செய்த
|
|
யானே, தோழி! தவறு உடையேனே.
|
தலைமகன் இரவுக் குறிக்கண்
சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லியது; தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார்
மகனார் கடலனார்
|
|
உரை |
|
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
|
|
கோடை அவ் வளி குழலிசை ஆக,
|
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
|
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
|
5
|
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
|
|
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
|
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
|
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
|
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
|
10
|
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
|
|
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
|
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
|
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
|
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
|
15
|
பலர்தில், வாழி தோழி! அவருள்,
|
|
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
|
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
|
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
|
தோழிக்குத் தலைவி
அறத்தொடு நின்றது. - கபிலர்
|
|
உரை |
|
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
|
|
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
|
|
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
|
|
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
|
5
|
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
|
|
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
|
|
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
|
|
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
|
|
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
|
10
|
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
|
|
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர்
|
|
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
|
|
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
|
|
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
|
15
|
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?
|
போக்கு உடன்பட்ட தலைமகள்
தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக்
கந்தரத்தனார்
|
|
உரை |
|
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும்
புனத்துக்
|
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
|
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
|
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
|
5
|
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
|
|
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
|
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
|
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
|
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
|
10
|
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
|
|
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
|
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென
|
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
|
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
|
15
|
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!
|
|
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்
|
|
நல்காமையின் அம்பல் ஆகி,
|
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
|
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?
|
இரவுக்குறிக்கண்
சிறைப்புறமாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. -
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்
|
|
உரை |
|
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
|
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
|
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
|
|
காமர் சேவல் ஏமம் சேப்ப;
|
5
|
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது
|
|
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
|
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
|
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
|
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா
உயிர்க்கும்
|
10
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின்
|
|
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
|
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
|
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
|
|
தானே சென்ற நலனும்
|
15
|
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே?
|
தலைமகன் பிரிவின்கண்,
தலைமகள் தோழிக்குச் சொற்றது.-
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
|
உரை |
|
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
|
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல்
சூழ்ச்சியின்,
|
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
|
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
|
5
|
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
|
|
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
|
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
|
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
|
|
நல்காது துறந்த காதலர், 'என்றும்
|
10
|
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
|
|
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
|
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
|
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
|
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
|
15
|
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
|
|
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
|
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
|
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
|
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
|
20
|
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
|
|
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
|
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
|
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
|
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
|
25
|
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
|
|
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
|
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
உரை |
|
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
|
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
|
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
|
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
|
5
|
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
|
|
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
|
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
|
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
|
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப்
பழிச்சிய
|
10
|
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
|
|
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
|
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
|
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
|
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
|
15
|
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
|
|
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
|
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
|
|
கூடாமையின், நீடியோரே.
|
பிரிவிடை வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
உரை |
|
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
|
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
|
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
|
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
|
5
|
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
|
|
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
|
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
|
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
|
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
|
10
|
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
|
|
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
|
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
|
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
|
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
|
15
|
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
|
|
மறப் புலி உழந்த வசி படு சென்னி
|
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
|
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
|
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
|
20
|
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?
|
செலவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி
தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற்
கீரத்தனார்
|
|
உரை |
|
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
|
|
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
|
|
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
|
|
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
|
5
|
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
|
|
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
|
|
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
|
|
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
|
|
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
|
10
|
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
|
|
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
|
|
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
|
|
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
|
|
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
|
15
|
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
|
|
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
|
|
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
|
|
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
|
|
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
|
20
|
ஆதி போகிய பாய்பரி நன் மா
|
|
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
|
|
கல் முதிர் புறங்காட்டு அன்ன
|
|
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன்
சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
உரை |
|
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;
|
|
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
|
|
யாமம் கொள வரின் கனைஇ, காமம்
|
|
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே.
|
5
|
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி
|
|
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
|
|
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
|
|
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
|
|
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
|
10
|
கான நாடன் வரூஉம், யானைக்
|
|
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,
|
|
மாரி வானம் தலைஇ நீர் வார்பு,
|
|
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
|
|
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
|
15
|
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்
|
|
உரை |
|
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
|
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
|
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
|
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
|
5
|
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
|
|
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
|
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
|
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
|
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
|
10
|
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
|
|
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
|
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
|
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
|
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
|
15
|
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
|
|
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
|
|
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்'
எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்'
என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன்
தாமோதரனார்
|
|
உரை |
|
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
|
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
|
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
|
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
|
5
|
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
|
|
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
|
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
|
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
|
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
|
10
|
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
|
|
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
|
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
|
|
கழுவுள் காமூர் போலக்
|
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என்
நெஞ்சே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. -
பரணர்
|
|
உரை |
|
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
|
|
குவளை உண்கண் தெண் பனி மல்க,
|
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
|
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
|
5
|
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
|
|
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
|
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
|
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
|
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
|
10
|
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
|
|
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
|
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
|
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
|
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
|
15
|
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
|
|
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
|
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
|
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
|
|
நல் நிறம் மருளும் அரு விடர்
|
20
|
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத்,
தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்
சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்
|
|
உரை |
|
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
|
|
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
|
|
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
|
|
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
|
5
|
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
|
|
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
|
|
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
|
|
யார்கொல் அளியள்தானே எம் போல்
|
|
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
|
10
|
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
|
|
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
|
|
ஆயமும் அயலும் மருள,
|
|
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?
|
வாயில் வேண்டிச் சென்ற
பாணற்குத் தலைமகள் வாயில்
மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்
|
|
உரை |
|
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
|
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
|
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
|
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
|
5
|
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென,
|
|
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
|
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
|
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
|
|
வெள்ளி வீதியைப் போல நன்றும்
|
10
|
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,
|
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
|
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
|
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
|
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!
|
செலவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
ஒளவையார்
|
|
உரை |
|
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம்
நயந்து
|
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
|
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
|
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள்
பிறிது
|
5
|
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
|
|
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
|
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
|
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
|
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
|
10
|
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
|
|
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
|
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
|
|
உறுவது கூறும், சிறு செந் நாவின்
|
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
|
15
|
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள்
சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்
|
|
உரை |
|
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
|
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
|
|
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
|
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
|
5
|
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்
|
|
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
|
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
|
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
|
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
|
10
|
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
|
|
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
|
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
|
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
|
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
|
15
|
விரல் ஊன்று வடுவின் தோன்றும்
|
|
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
|
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
|
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
|
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
|
5
|
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
|
|
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
|
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
|
|
கான யானை கவளம் கொள்ளும்
|
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
|
10
|
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி!
|
|
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
|
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
|
|
வினை அழி பாவையின் உலறி,
|
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
வேம்பற்றூர்க் குமரனார்
|
|
உரை |
|
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
|
|
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
|
|
எமியம் ஆக, துனி உளம் கூர,
|
|
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
|
5
|
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி
|
|
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது
|
|
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
|
|
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
|
|
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
|
10
|
எனக்கே வந்தனை போறி! புனற் கால்
|
|
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து
அவிழ,
|
|
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
|
|
இனையை ஆகிச் செல்மதி;
|
|
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச்
சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
உரை |
|
கானலும் கழறாது; கழியும் கூறாது;
|
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
|
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
|
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
|
5
|
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
|
|
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
|
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
|
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
|
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
|
10
|
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
|
|
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
|
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
|
|
'நின் உறு விழுமம் களைந்தோள்
|
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.
|
தலைமகள் காமம் மிக்க
கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக்
கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
|
|
உரை |
|
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
|
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
|
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
|
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப்
பெயர்ப்பின்,
|
5
|
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
|
|
|
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
|
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
|
|
வருதும்' என்றனர் அன்றே தோழி!
|
10
|
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
|
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
|
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
|
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
|
15
|
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
|
|
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
|
|
மண் பயம் பூப்பப் பாஅய்,
|
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்;
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி
சாத்தனார்.
|
|
உரை |
|
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
|
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
|
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
|
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
|
5
|
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று
|
|
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
|
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
|
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
|
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
|
10
|
காலை வந்தன்றால் காரே மாலைக்
|
|
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
|
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
|
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
|
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
|
15
|
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர்
திறத்தே?
|
தலைமகன் குறித்த பருவ வரவு
கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
-கருவூர்க் கலிங்கத்தார்
|
|
உரை |
|
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
|
|
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
|
|
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
|
|
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
|
5
|
வலித்து வல்லினர், காதலர்; வாடல்
|
|
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
|
|
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
|
|
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
|
|
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
|
10
|
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
|
|
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
|
|
இலை இல மலர்ந்த இலவமொடு
|
|
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய
பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
|
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
|
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
|
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
|
5
|
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
|
|
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
|
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
|
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
|
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
|
10
|
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
|
|
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
|
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
|
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
|
15
|
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
|
|
வேனில் வெற்பின் கானம் காய,
|
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
|
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
|
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
|
20
|
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
|
|
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
|
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
|
|
வைகு கடல் அம்பியின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தலைமகட்குத் தோழி
சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
|
|
உரை |
|
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
|
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
|
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
|
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
|
5
|
வித்திய மருங்கின் விதை பல நாறி,
|
|
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
|
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
|
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
|
|
|
10
|
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
|
|
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
|
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
|
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
|
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
|
15
|
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
|
|
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
|
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
|
|
விரிஉளை, நல் மான் கடைஇ
|
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத்,
தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
|
|
உரை |
|
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
|
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர்
போல,
|
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப்
|
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
|
5
|
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே
|
|
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
|
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
|
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
|
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
|
10
|
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,
|
|
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
|
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
|
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
|
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
|
15
|
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,
|
|
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
|
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
|
|
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
|
|
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
|
20
|
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,
|
|
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
|
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
|
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
|
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச்
சொல்லியது.- நக்கீரர்
|
|
உரை |
|
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
|
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
|
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
|
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும்
புறம்,
|
5
|
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
|
|
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
|
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
|
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
|
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
|
10
|
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
|
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
|
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
|
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
|
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
|
15
|
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
|
|
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
|
வாயில் வேண்டிச் சென்ற
விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
|
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
|
|
துவலை தூவல் கழிய, அகல் வயல்
|
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
|
5
|
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,
|
|
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
|
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
|
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
|
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
|
10
|
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,
|
|
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
|
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
|
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
|
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்
|
15
|
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;
|
|
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
|
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
|
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
|
|
எயிறு தீப் பிறப்பத் திருகி,
|
20
|
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச்
சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
உரை |
|
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
|
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
|
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
|
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
|
5
|
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
|
|
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
|
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
|
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
|
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
|
10
|
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!
|
|
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
|
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
|
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
|
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
|
15
|
இனையல் என்றி; தோழி! சினைய
|
|
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
|
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
|
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
|
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
|
20
|
இன் இளவேனிலும் வாரார்,
|
|
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத்
தலைமகள், வன்புறை எதிர் அழிந்து,
சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார்
|
|
உரை |
|
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
|
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
|
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
|
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
|
5
|
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
|
|
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
|
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
|
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
|
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
|
10
|
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,
|
|
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
|
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
|
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
|
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
|
15
|
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
|
|
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
|
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
|
|
தொல் நலம் சிதையச் சாஅய்,
|
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர,
தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன்
எயிற்றியார்
|
|
உரை |
|
மணி மருள் மலர முள்ளி அமன்ற,
|
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
|
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி,
|
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
|
5
|
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல்
சூட்டுப்
|
|
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
|
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
|
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
|
|
காமம் பெருமை அறியேன், நன்றும்
|
10
|
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல்
|
|
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
|
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
|
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
|
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த
மொய்ம்பின்,
|
15
|
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை,
|
|
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என
|
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
|
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என,
|
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
|
20
|
ஆதிமந்தி போல,
|
|
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க
தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
'துனி இன்று இயைந்த துவரா நட்பின்
|
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது
|
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
|
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
|
5
|
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை
|
|
மூங்கில் இள முளை திரங்க, காம்பின்
|
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து
|
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை,
|
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி,
|
10
|
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை
|
|
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
|
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும்
|
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய்
|
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச்
|
15
|
செம் முக மந்தி ஆடும்
|
|
நல் மர மருங்கின் மலை இறந்தோரே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. -
காவன் முல்லைப் பூதனார்
|
|
|
அவரை ஆய் மலர் உதிர, துவரின
|
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
|
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல்
பகன்றைக்
|
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
|
5
|
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு
|
|
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க்
கழனி
|
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
|
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
|
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
|
10
|
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
|
|
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
|
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
|
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
|
|
நமக்கே எவ்வம் ஆகின்று;
|
15
|
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!
|
தலைமகன் பிரிவின்கண்
வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்'
என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார்
மகனார் நெய்தல் தத்தனார்
|
|
உரை |
|
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
|
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
|
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
|
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
|
5
|
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்,
|
|
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
|
|
அரிய கானம் என்னார், பகை பட
|
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
|
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
|
10
|
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி,
|
|
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
|
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
|
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை
மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|
|
உரை |
|
அம்ம வாழி, தோழி! பல் நாள்
|
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
|
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
|
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
|
5
|
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார்
பூட்டி,
|
|
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
|
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
|
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்
பூண்
|
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
|
10
|
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்
|
|
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
|
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
|
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
|
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
|
15
|
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
|
|
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
|
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
|
|
உழை மான் இன நிரை ஓடும்
|
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
நக்கீரனார்
|
|
உரை |
|
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
|
|
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
|
|
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
|
|
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
|
5
|
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
|
|
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
|
|
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
|
|
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
|
|
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
|
10
|
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்
|
|
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
|
|
பெருங் குளம் காவலன் போல,
|
|
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள்
சொல்லியது. - நக்கண்ணையார்
|
|
உரை |
|
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
|
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப்
போழ,
|
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
|
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
|
5
|
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
|
|
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
|
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
|
|
கழியாமையே, அழி படர் அகல,
|
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
|
10
|
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
|
|
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை |
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
|
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
|
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
|
15
|
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
|
|
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
|
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
|
|
நிரை வளை ஊருந் தோள்' என,
|
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்,
ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது.
-மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர,
|
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
|
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப,
|
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப,
|
5
|
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய,
|
|
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில்
|
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர,
|
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப்
|
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ,
|
10
|
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற,
|
|
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது,
|
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
|
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள்,
|
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
|
15
|
அன்பிலாளன் அறிவு நயந்தேனே.
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறமாக, தோழியால் சொல்
எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. -
மோசிக் கரையனார்
|
|
உரை |
|
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
|
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
|
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
|
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
|
5
|
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,
|
|
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
|
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
|
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
|
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
|
10
|
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர்
|
|
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
|
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
|
|
காய் சின யானை கங்குல் சூழ,
|
|
அஞ்சுவர இறுத்த தானை
|
15
|
வெஞ் சின வேந்தன் பாசறையோரே?
|
பருவம் கண்டு, வன்புறை எதிர்
அழிந்து, தலைமகள் தோழிக்குச்
சொல்லியது;தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு
இளங்கண்ணனார்
|
|
உரை |
|
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
|
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
|
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
|
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
|
5
|
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை
|
|
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
|
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
|
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
|
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
|
10
|
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு
|
|
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து,
|
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
|
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து
எடுத்து,
|
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல
|
15
|
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க,
|
|
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
|
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
|
|
புலாஅல் கையர், பூசா வாயர்,
|
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
|
20
|
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
|
|
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
|
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
|
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்,
ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது.
-மாமூலனார்
|
|
உரை |
|
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
|
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
|
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
|
5
|
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,
|
|
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
|
|
நோக்குதொறும் நோக்குதொறும்
தவிர்விலையாகி,
|
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
|
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
|
10
|
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
|
|
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
|
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் |
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
|
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
|
15
|
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது
|
|
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
|
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
|
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
|
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
|
20
|
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
|
|
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!
|
பரத்தையிற் பிரிந்து வந்து
கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
-பரணர்
|
|
உரை |
|
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
|
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
|
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
|
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
|
5
|
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை,
|
|
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
|
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
|
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
|
|
மை பட்டன்ன மா முக முசுவினம்
|
10
|
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென
|
|
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
|
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
|
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
|
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
|
15
|
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு
வினை
|
|
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
|
|
தோளே தோழி! தவறு உடையவ்வே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது
ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத்
தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
|
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
|
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
|
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
|
5
|
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்
|
|
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
|
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
|
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
|
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
|
10
|
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு
|
|
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
|
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
|
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
|
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
|
15
|
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்
|
|
நில வரை எல்லாம் நிழற்றி,
|
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.
|
பிரிவின்கண் தலைமகள் அறிவு
மயங்கிச் சொல்லியது.-ஒளவையார்
|
|
உரை |
|
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
|
|
பகல் அழி தோற்றம் போல, பையென
|
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
|
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
|
5
|
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
|
|
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
|
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
|
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
|
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
|
10
|
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
|
|
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
|
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
|
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
|
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
|
15
|
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
|
|
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
|
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
|
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
|
|
வந்தன்று அம்ம, தானே;
|
20
|
வாரார் தோழி! நம் காதலோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு
அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்
|
|
உரை |
|
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
|
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
|
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
|
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
|
5
|
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை
|
|
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு
இயல்
|
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
|
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
|
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
|
10
|
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
|
|
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
|
|
அறை இறந்து, அவரோ சென்றனர்
|
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
உரை |
|
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
|
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
|
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
|
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
|
5
|
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,
|
|
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
|
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
|
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச்
சேர்ப்பன்,
|
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
|
10
|
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
|
|
மணவா முன்னும் எவனோ தோழி!
|
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
|
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
|
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
|
15
|
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,
|
|
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. -
நக்கீரர்
|
|
உரை |
|
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
|
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென்
முறிச்
|
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
|
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
|
5
|
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
|
|
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
|
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம்
படர்ந்து,
|
|
இரவின் மேயல் மரூஉம் யானைக்
|
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
|
10
|
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்
|
|
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
|
|
உடு உறு கணையின் போகி, சாரல்
|
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
|
|
பலவின் பழத்துள் தங்கும்
|
15
|
மலை கெழு நாடன் மணவாக்காலே!
|
வெறி அச்சுறீஇ,தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
|
|
உரை |
|
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
|
|
வலை வலந்தனைய ஆக, பல உடன்
|
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
|
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
|
5
|
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி,
|
|
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
|
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
|
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
|
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
|
10
|
செல்ப என்ப தோழி! யாமே,
|
|
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
|
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
|
|
இன்னா மொழிதும் என்ப;
|
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள்
தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு
உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார்
|
|
உரை |
|
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
|
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
|
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
|
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
|
5
|
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
|
|
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
|
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
|
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
|
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
|
10
|
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
|
|
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
|
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
|
|
நம் நோய் அறியா அறனிலாளர்
|
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
|
15
|
ஆனாது எறிதரும் வாடையொடு
|
|
நோனேன் தோழி! என் தனிமையானே.
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
உரை |
|
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
|
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு
விளங்கி,
|
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
|
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
|
5
|
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ்
சினைத்
|
|
தண் துளி அசைவளி தைவரும் நாட!
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண்
சாம்பாது,
|
|
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
|
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
|
10
|
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின்,
|
|
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
|
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
|
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
|
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே
|
15
|
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை
|
|
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
|
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
|
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
|
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
|
20
|
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர்
|
|
நீடலர் ஆகி வருவர், வல்லென;
|
|
கங்குல் உயவுத் துணை ஆகிய
|
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத்
தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன்
இளந்தேவனார்
|
|
உரை |
|
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
|
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
|
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
|
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
|
5
|
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை
|
|
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
|
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப்
பிரிந்தோர்
|
|
புலம் கந்தாக இரவலர் செலினே,
|
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
|
10
|
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
|
|
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
|
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
|
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
|
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
|
15
|
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!
|
|
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
|
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
|
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
|
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
|
20
|
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்
|
|
உரை |
|
பகலினும் அகலாதாகி, யாமம்
|
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
|
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
|
|
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
|
5
|
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை,
|
|
பருகுவன்ன காதலொடு திருகி,
|
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
|
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
|
|
அருளிலாளர் பொருள்வயின் அகல,
|
10
|
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
|
|
யான் எவன் உளெனோ தோழி! தானே
|
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
|
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
|
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
|
15
|
கனை எரி பிறப்ப ஊதும்
|
|
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?
|
பிரிவு உணர்த்தப்பட்ட
தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன்
பேரிசாத்தனார்
|
|
உரை |
|
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
|
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
|
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
|
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
|
5
|
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
|
|
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
|
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
|
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
|
|
காடு மிக நெடிய என்னார், கோடியர்
|
10
|
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
|
|
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
|
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
|
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
|
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
|
15
|
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்
|
|
தண் பெரு படாஅர் வெரூஉம்
|
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது
வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச்
சாத்தனார்
|
|
உரை |
|
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என
|
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
|
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
|
|
5
|
ஐய ஆக வெய்ய உயிரா,
|
|
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
|
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
|
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
|
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள்
புரிந்து,
|
10
|
வருவர் வாழி, தோழி! பெரிய
|
|
நிதியம் சொரிந்த நீவி போலப்
|
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
|
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
|
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
|
15
|
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
|
|
இல் வழிப் படூஉம் காக்கைக்
|
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை
பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
அம்ம! வாழி, தோழி! காதலர்,
|
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர்,
|
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த
|
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
|
5
|
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது
|
|
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி,
|
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு
கோள்
|
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
|
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு,
|
10
|
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம்
|
|
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய,
|
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல்,
|
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்;
|
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள்,
|
15
|
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ,
|
|
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது,
|
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை,
|
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை,
|
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
|
20
|
சோலை அத்தம் மாலைப் போகி,
|
|
ஒழியச் சென்றோர்மன்ற;
|
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?
|
கொண்டு நீங்கக் கருதி
ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
|
|
உரை |
|
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
|
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
|
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
|
|
அரவின் பைந் தலை இடறி, பானாள்
|
5
|
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி,
|
|
துனி கண் அகல அளைஇ, கங்குலின்
|
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
|
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின்,
|
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம்
|
10
|
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து
கொண்டு
|
|
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி
|
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
|
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
|
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
|
15
|
சாரல் நாடன் சாயல் மார்பே!
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
-மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
|
|
உரை |
|
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
|
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
|
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
|
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
|
5
|
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
|
|
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
|
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
|
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
|
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
|
10
|
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச்
சீறியாழ்ப்
|
|
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
|
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
|
|
வேளிரொடு பொரீஇய, கழித்த
|
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
|
தலைமகன் பிரிவின்கண்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
உரை |
|
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
|
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
|
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து
ஒடுங்கிய,
|
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
|
5
|
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,
|
|
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
|
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
|
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
|
|
10
|
நின் புரை தக்க சாயலன் என, நீ
|
|
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
|
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
|
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
|
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
|
15
|
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.
-கபிலர்
|
|
உரை |
|
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
|
|
ஆக மேனி அம் பசப்பு ஊர,
|
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின்
|
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு
|
5
|
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின்
|
|
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள்
|
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி,
|
|
நீடலர் வாழி, தோழி! கோடையில்,
|
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
|
10
|
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய,
|
|
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து,
|
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
|
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து,
|
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என,
|
15
|
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா
|
|
நின் வாய் இன் மொழி நல் வாயாக
|
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
|
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம்
|
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
|
20
|
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி,
|
|
மறுதரல் உள்ளத்தர்எனினும்,
|
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.
|
பிரிவிடை வற்புறுத்தும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
உரை |
|
உய் தகை இன்றால் தோழி! பைபய,
|
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
|
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
|
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர்
நிறைக்
|
5
|
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,
|
|
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
|
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
|
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
|
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
|
10
|
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,
|
|
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
|
|
யாணர் வேனில்மன், இது
|
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?
|
பிரிவின்கண் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார்
|
|
உரை |
|
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி,
|
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண்
|
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க்
|
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால்,
|
5
|
பல் படைப் புரவி எய்திய தொல் இசை
|
|
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
|
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து,
|
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
|
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
|
10
|
சில் நாள் கழிக!' என்று முன் நாள்
|
|
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
|
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்,
|
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
|
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய
|
15
|
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த
|
|
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச்
|
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப,
|
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு
|
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
|
20
|
கல் கண் சீக்கும் அத்தம்,
|
|
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!
|
தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
உரை |
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
|
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
|
|
சால் பெருந் தானைச் சேரலாதன்
|
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
|
5
|
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
|
|
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
|
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
|
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
|
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
|
10
|
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
|
|
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி |
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
|
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
|
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
|
15
|
கெடு மகப் பெண்டிரின் தேரும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
மாமூலனார்
|
|
உரை |
|
என் ஆவதுகொல் தானே முன்றில்,
|
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
|
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
|
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
|
5
|
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்
|
|
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
|
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான்
கோட்டுக்
|
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
|
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,
|
10
|
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,
|
|
'யானை வவ்வின தினை' என, நோனாது,
|
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
|
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
|
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது.
-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
|
|
உரை |
|
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
|
|
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
|
|
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன்
|
|
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
|
5
|
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே,
|
|
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
|
|
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
|
|
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
|
|
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
|
10
|
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை
|
|
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
|
|
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
|
|
கல் ஊர் பாம்பின் தோன்றும்
|
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?
|
தலைமகன் பிரிவின்கண்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
உரை |
|
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
|
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
|
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
|
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
|
5
|
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
|
|
முழவன் போல அகப்படத் தழீஇ,
|
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
|
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
|
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ
|
10
|
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;
|
|
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
|
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
|
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
|
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
|
15
|
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,
|
|
புதுவது புனைந்த திறத்தினும்,
|
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.
|
வரைந்து எய்திய பின்றை மண
மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள்
சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -
அஞ்சியத்தை மகள் நாகையார்
|
|
உரை |
|
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
|
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
|
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
|
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
|
5
|
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;
|
|
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
|
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
|
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
|
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது
|
10
|
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
|
|
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
|
|
'யாமே எமியம் ஆக, நீயே
|
|
பொன் நயந்து அருள் இலையாகி,
|
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால்
பொற்கொல்லனார்
|
|
உரை |
|
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
|
|
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
|
|
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
|
|
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
|
5
|
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன்
|
|
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
|
|
முல்லை இல்லமொடு மலர, கல்ல
|
|
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
|
|
கார் தொடங்கின்றே காலை; காதலர்
|
10
|
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை,
|
|
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
|
|
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
|
|
கொலை குறித்தன்ன மாலை
|
|
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - மதுரை
மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|
|
உரை |
|
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
|
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
|
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
|
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
|
5
|
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,
|
|
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
|
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
|
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
|
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
|
10
|
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர்
எருத்தின்,
|
|
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
|
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
|
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
|
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
|
15
|
உயிர் குழைப்பன்ன சாயல்,
|
|
செயிர் தீர், இன் துணைப்
புணர்ந்திசினோர்க்கே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. -
பரணர்
|
|
உரை |
|
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
|
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
|
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
|
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
|
5
|
கல்லா இளையர் கலித்த கவலை,
|
|
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
|
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
|
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
|
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
|
10
|
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
|
|
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
|
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
|
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
|
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
|
15
|
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,
|
|
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
|
|
நோய் இலர் பெயர்தல் அறியின்,
|
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன்
தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங்
கொற்றனார்
|
|
உரை |
|
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
|
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
|
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
|
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர,
|
5
|
காமர் பீலி ஆய் மயில் தோகை
|
|
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
|
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல
|
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி,
|
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து,
|
10
|
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்
|
|
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்,
|
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
|
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
|
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
|
15
|
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்,
|
|
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி,
|
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி!
|
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர்
|
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு
|
20
|
அள் இலைப் பலவின் கனி கவர் கைய
|
|
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
|
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங்
குன்றத்து,
|
|
பாடு இன் அருவி சூடி,
|
|
வான் தோய் சிமையம் தோன்றலானே.
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
-காவட்டனார்
|
|
உரை |
|
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
|
|
வாளை நாள் இரை தேரும் ஊர!
|
|
நாணினென், பெரும! யானே பாணன்
|
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
|
5
|
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
|
|
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து
ஒழிந்த
|
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
|
|
கணையன் நாணியாங்கு மறையினள்
|
|
மெல்ல வந்து, நல்ல கூறி,
|
10
|
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
|
|
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
|
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
|
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
|
|
நுதலும் கூந்தலும் நீவி,
|
15
|
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.
|
தோழி வாயில் மறுத்தது;
தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
உரை |
|
அம்ம வாழி, தோழி நம் மலை
|
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த்
தட்டையின்,
|
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
|
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை
அமல்
|
5
|
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
|
|
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
|
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
|
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
|
|
இன் இசை ஓரா இருந்தனமாக,
|
10
|
'மை ஈர் ஓதி மட நல்லீரே!
|
|
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
|
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
|
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
|
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
|
15
|
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
|
|
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
|
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
|
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என,
|
|
அன்னை தந்த முது வாய் வேலன்,
|
20
|
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
|
|
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின்,
|
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின
|
|
மையல் வேழ மெய் உளம்போக,
|
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
|
25
|
காட்டு மான் அடி வழி ஒற்றி,
|
|
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே?
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி
தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்
|
|
உரை |
|
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
|
|
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
|
|
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
|
|
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
|
5
|
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,
|
|
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு
பரட்டு
|
|
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
|
|
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
|
|
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
|
10
|
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து,
|
|
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
|
|
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
|
|
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
|
|
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
|
15
|
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்
|
|
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
|
|
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
|
|
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
|
20
|
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை
|
|
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
|
|
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
|
|
படு மழை உருமின் முழங்கும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. -
நக்கீரனார்
|
|
உரை |
|
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
|
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
|
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்
|
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்
|
5
|
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,
|
|
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த
என்
|
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
|
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி!
|
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி
|
10
|
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ
|
|
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன்
|
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
|
|
குன்று புகு பாம்பின் தோன்றும்,
|
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே!
|
பிரிவிடை வற்புறுத்தும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன்
முல்லைப் பூதனார்
|
|
உரை |
|
தண் கயம் பயந்த வண் காற் குவளை
|
|
|
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
|
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
|
5
|
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
|
|
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
|
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
|
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
|
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
|
10
|
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
|
|
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர்
குரல்
|
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
|
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
|
|
ஆடு கழை இரு வெதிர் நரலும்
|
15
|
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!
|
பிரிவிடைத் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார்
இளங்கீரனார்
|
|
உரை |
|
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
|
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
|
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
|
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
|
5
|
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
|
|
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
|
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
|
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
|
|
நன்று புறமாறி அகறல், யாழ நின்
|
10
|
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
|
|
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
|
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
|
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
|
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
|
15
|
நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
|
|
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
|
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
|
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
|
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
|
20
|
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
|
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
|
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
|
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
|
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
|
25
|
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!
|
காமம் மிக்க கழி படர்
கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள்
தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு
புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார்
|
|
உரை |
மேல் |