தோழி
|
|
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
|
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
|
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
|
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
|
5
|
அறியாது உண்ட கடுவன் அயலது
|
|
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
|
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
|
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
|
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
|
10
|
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
|
|
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
|
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
|
|
இவளும், இனையள்ஆயின், தந்தை
|
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
|
15
|
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
|
|
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
|
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
|
பகற்குறிக்கண் செறிப்பு
அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
|
|
உரை |
|
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
|
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
|
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
|
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
|
5
|
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
|
|
கருவி வானம் கதழ் உறை சிதறி,
|
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
|
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
|
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
|
10
|
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
|
|
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
|
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
|
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
|
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
|
15
|
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
|
|
போது அவிழ் அலரின் நாறும்
|
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.
|
தோழி தலைமகளைப் பருவங்
காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார்
|
|
உரை |
|
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
|
|
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
|
|
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
|
|
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
|
5
|
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
|
|
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
|
|
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
|
|
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்
கொண்டலொடு
|
|
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
|
10
|
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
|
|
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
|
|
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
|
|
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
|
இரவுக்குறி வந்து தலைமகளைக்
கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
|
|
உரை |
|
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
|
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
|
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
|
|
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
|
5
|
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
|
|
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
|
|
குழியில் கொண்ட மராஅ யானை
|
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
|
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
|
10
|
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
|
|
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
|
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
|
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
|
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
|
15
|
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
|
|
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
|
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
|
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
|
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
|
20
|
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத்
துயல்வர,
|
|
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
|
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
|
|
வெண் குருகு நரல, வீசும்
|
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
|
பொருள்வயிற் பிரியலுற்ற
தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது;
உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச்
சாத்தனார்
|
|
உரை |
|
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
|
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
|
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
|
|
மராஅ யானை மதம் தப ஒற்றி,
|
5
|
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
|
|
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
|
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
|
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
|
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
|
10
|
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
|
|
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
|
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
|
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
|
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
|
15
|
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம்
பொதும்பில்,
|
|
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
|
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
|
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.
|
தோழி இரவு வருவானைப் பகல்
வா என்றது. - கபிலர்
|
|
உரை |
|
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
|
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
|
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
|
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
|
5
|
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
|
|
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
|
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
|
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
|
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
|
10
|
பல் பூங் கானல் அல்கினம் வருதல்
|
|
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
|
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
|
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,
|
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
|
15
|
வலவன் ஆய்ந்த வண் பரி
|
|
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.
|
பகற்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச்
சொல்லியது. - உலோச்சனார்
|
|
உரை |
|
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல்
சாஅய்,
|
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
|
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும்,
காஞ்சிப்
|
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
|
5
|
வதுவை நாற்றம் புதுவது கஞல,
|
|
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
|
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
|
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
|
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
|
10
|
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
|
|
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
|
|
இகழுநர் இகழா இள நாள் அமையம்
|
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
|
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
|
15
|
வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
|
|
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
|
|
மெல்லிய இனிய கூறி, வல்லே
|
|
வருவர் வாழி தோழி! பொருநர்
|
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
|
20
|
பொதியிற் செல்வன், பொலந்தேர்த்
திதியன்,
|
|
இன் இசை இயத்தின் கறங்கும்
|
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.
|
பருவங் கண்டு அழிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர்
தந்த பூதப் பாண்டியன்
|
|
உரை |
|
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
|
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
|
|
கானம் கடிய என்னார், நாம் அழ,
|
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண்
தருமார்,
|
5
|
செல்ப" என்ப' என்போய்! நல்ல
|
|
மடவைமன்ற நீயே; வடவயின்
|
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
|
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
|
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
|
10
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்
வாய்
|
|
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
|
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
|
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
|
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
|
15
|
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
|
|
குருதியொடு துயல்வந்தன்ன நின்
|
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
|
செலவு உணர்ந்து வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மதுரைக்கணக்காயனார்
|
|
உரை |
|
மெய்யின் தீரா மேவரு காமமொடு
|
|
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
|
|
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
|
|
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
|
5
|
இருவி தோன்றின பலவே. நீயே,
|
|
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
|
|
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
|
|
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
|
|
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
|
10
|
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி,
|
|
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
|
|
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
|
|
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின்,
|
|
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி
|
|
உரை |
|
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
|
|
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
|
|
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
|
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
|
5
|
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
|
|
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
|
|
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
|
|
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
|
|
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
|
10
|
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
|
|
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
|
|
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
|
|
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
|
|
தண் நறுங் கானல் வந்து, 'நும்
|
15
|
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?
|
பகற்குறி வந்த தலைமகற்குத்
தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த
நெடுஞ்சேரலாதன்
|
|
உரை |
|
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
|
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
|
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
|
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
|
5
|
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
|
|
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
|
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ்
கயிற்று
|
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
|
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
|
10
|
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
|
|
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
|
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
|
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
|
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
|
15
|
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு
|
|
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
|
|
கூஉம் கணஃது எம் ஊர்' என
|
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.
|
தோழி தலைமகன் குறை கூறியது;
பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச்
சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி
பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம
வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
|
உரை |
|
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
|
|
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
|
|
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
|
|
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
|
5
|
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
|
|
கோடை நீடிய பைது அறு காலை,
|
|
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
|
|
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
|
|
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
|
10
|
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
|
|
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
|
|
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
|
|
ஓங்கித் தோன்றும் உயர் வரை
|
|
வான் தோய் வெற்பன் வந்தமாறே
|
தலைமகன் வரைவு மலிந்தமை
தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்
|
|
உரை |
|
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
|
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
|
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
|
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
|
5
|
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
|
|
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
|
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
|
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
|
10
|
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
|
|
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
|
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
|
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
|
15
|
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
|
|
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?
|
வாயில் வேண்டிச் சென்ற
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர்
நன் முல்லையார்
|
|
உரை |
|
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
|
|
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
|
|
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
|
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
|
5
|
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
|
|
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
|
|
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
|
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
|
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
|
10
|
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
|
|
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
|
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
|
|
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
|
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
|
15
|
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,
|
|
நாணி நின்றனெமாக, பேணி,
|
|
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
|
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
|
|
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
|
20
|
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
|
|
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
|
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
|
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
|
|
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
|
25
|
மகனே தோழி!' என்றனள்.
|
|
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.
|
செவிலித்தாய்க்குத் தோழி
அறத்தொடு நின்றது. - தங்கால் முடக்
கொற்றனார்
|
|
உரை |
|
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
|
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
|
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
|
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
|
5
|
பகலும் நம்வயின் அகலானாகிப்
|
|
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
|
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
|
|
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
|
|
மல்லல் மூதூர் மறையினை சென்று,
|
10
|
சொல்லின் எவனோ பாண! 'எல்லி
|
|
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
|
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
|
|
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
|
|
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.
|
தோழி பாணனுக்குச்
சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
|
|
உரை |
|
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
|
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
|
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
|
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
|
5
|
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
|
|
மரம் செல மிதித்த மாஅல் போல,
|
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
|
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
|
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
|
10
|
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,
|
|
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
|
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
|
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
|
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
|
15
|
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
|
|
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்
நாட்டு
|
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
|
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.-
மதுரை மருதன் இளநாகன்
|
|
உரை |
|
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
|
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
|
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
|
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
|
5
|
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
|
|
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
|
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
|
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
|
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
|
10 |
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
|
|
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
|
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
|
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
|
|
நாடு தரு நிதியினும் செறிய
|
15
|
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
|
தலைமகற்குத் தோழி செறிப்பு
அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
உரை |
|
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
|
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்'
எனத்
|
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
|
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய்
உழந்து
|
5
|
ஆழல் வாழி, தோழி! தாழாது,
|
|
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
|
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
|
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
|
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
|
10
|
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
|
|
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
|
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
|
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
|
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது
|
15
|
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
|
|
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
|
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
|
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
உரை |
|
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
|
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
|
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
|
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
|
5
|
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
|
|
பாடிச் சென்ற பரிசிலர் போல
|
|
உவ இனி வாழி, தோழி! அவரே,
|
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
|
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
|
10
|
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
|
|
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி
சுடர்
|
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
|
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
|
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
|
15
|
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
|
|
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
|
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
|
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
|
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
|
20
|
அரியவால்' என அழுங்கிய செலவே!
|
வேறுப்பட்ட தலைமகட்குத்
தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
உரை |
|
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
|
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
|
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
|
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
|
5
|
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
|
|
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
|
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
|
|
கான மட மரைக் கணநிரை கவரும்
|
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
|
10
|
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
|
|
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
|
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
|
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
|
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
|
15
|
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
|
|
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
|
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
|
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
|
|
தலை நாள் அலரின் நாறும் நின்
|
20
|
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.
|
'பொருள்வயிற் பிரிந்து
நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற
தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித்
தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார்
மகனார் பரங்கொற்றனார்
|
|
உரை |
|
கொடுந் திமிற் பரதவர் வேட்டம்
வாய்த்தென,
|
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
|
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
|
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
|
5
|
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
|
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
|
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
|
|
வதுவை கூடிய பின்றை, புதுவது
|
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
|
10
|
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
|
|
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
|
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
|
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
|
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
|
15
|
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
|
|
பல் வீழ் ஆலம் போல,
|
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
|
தலைமகன் வரைவு மலிந்தமை
தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத்
தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
|
|
உரை |
|
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு,
குறைந்தோர்
|
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
|
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
|
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
|
5
|
மை இல் மான் இனம் மருள, பையென
|
|
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
|
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
|
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
|
10
|
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
|
|
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
|
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
|
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
|
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
|
15
|
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
|
|
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
|
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
|
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
|
பொருள்வயிற் பிரிந்த
இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி
சொல்லியது - அந்தியிளங்கீரனார்
|
|
உரை |
|
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
|
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
|
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
|
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
|
5
|
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,
|
|
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
|
|
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என,
|
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
|
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
|
10
|
இருவேம் நம் படர் தீர வருவது
|
|
காணிய வம்மோ காதல்அம் தோழி!
|
|
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
|
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
|
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
|
15
|
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி
|
|
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
|
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு
அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. -
எருமை வெளியனார்
|
|
உரை |
|
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
|
|
பொருள்" என வலித்த பொருள் அல்
காட்சியின்
|
|
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
|
|
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
|
5
|
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
|
|
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
|
|
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
|
|
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
|
|
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
|
10
|
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர்
வாய்,
|
|
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
|
|
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
|
|
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
|
|
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
|
15
|
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்
|
|
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என-
|
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
|
|
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
|
|
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
|
20
|
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி
|
|
ஆனா நோயை ஆக, யானே
|
|
பிரியச் சூழ்தலும் உண்டோ,
|
|
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'
|
'பொருள்வயிற் பிரிவர்' என
வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி
சொல்லியது. - மதுரைப்போத்தனார்
|
|
உரை |
|
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
|
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
|
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
|
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று
ஒருத்தல்
|
5
|
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
|
|
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
|
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
|
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
|
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
|
10
|
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
|
|
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
|
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
|
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
|
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
|
15
|
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
|
|
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
|
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர்
கொண்டு,
|
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
|
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
|
20
|
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
|
|
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
|
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
|
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
|
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?
|
களவுக் காலத்துப் பிரிந்து
வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை
நக்கீரனார்
|
|
உரை |
|
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன்
வழங்கும்
|
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
|
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
|
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
|
5
|
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
|
|
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
|
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
|
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
|
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
|
10
|
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
|
|
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ்
பொன்
|
|
தண் நறும் பைந் தாது உறைக்கும்
|
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத்
தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங்
கண்ணனார்
|
|
உரை |
|
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
|
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
|
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
|
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
|
5
|
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
|
|
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
|
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
|
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
|
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
|
10
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
|
|
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
|
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
|
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
|
|
மை எழில் உண்கண் கலுழ
|
15
|
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?
|
பிரிவுணர்த்திய தலைமகற்கு,
தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து
சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
|
|
உரை |
|
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள்
நெகிழவும்,
|
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
|
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
|
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
|
5
|
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
|
|
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
|
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
|
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
|
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
|
10
|
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
|
|
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
|
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
|
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
|
|
வருதும், யாம்' எனத் தேற்றிய
|
15
|
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.
|
தலைமகன் பிரிய, வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர்
கிழார் மகனார் கண்ணனார்
|
|
உரை |
|
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
|
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
|
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
|
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
|
5
|
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
|
|
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
|
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
|
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
|
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
|
10
|
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
|
|
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
|
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
|
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
|
கொடு விரல் உளியம் கெண்டும்
|
|
15
|
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-
ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
உரை |
|
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
|
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
|
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
|
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
|
5
|
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்
|
|
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
|
|
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
|
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
|
10
|
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
|
|
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
|
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
|
|
'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
|
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.
|
பகற்குறி வந்து கண்ணுற்று
நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு
நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
|
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
|
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
|
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
|
5
|
பாசி தின்ற பைங் கண் யானை
|
|
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
|
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
|
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர்
ஆயினும்,
|
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
|
10
|
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
|
|
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
|
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
|
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
|
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
|
15
|
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
|
|
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
|
|
குடநாடு பெறினும் தவிரலர்
|
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
|
பிரிவிடை மெலிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
உரை |
|
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
|
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
|
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
|
5
|
வாரல் வாழியர், ஐய! நேர் இறை
|
|
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும்
|
|
காவல் கண்ணினம் தினையே; நாளை
|
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
|
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
|
10
|
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை,
|
|
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
|
|
திருமணி விளக்கின் பெறுகுவை
|
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.
|
இரவுக்குறிச் சென்று
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை,
பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி
வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர்
நற்றாமனார்
|
|
உரை |
|
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
|
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
|
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
|
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
|
5
|
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
|
|
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
|
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
|
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
|
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
|
10
|
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
|
|
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
|
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
|
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
|
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
|
15
|
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
|
|
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
|
|
களிறு கவர் கம்பலை போல,
|
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.
|
தோழி வாயில் மறுத்தது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
|
|
உரை |
|
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
|
|
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
|
|
இனிய உள்ளம் இன்னாஆக,
|
|
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
|
5
|
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்
|
|
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
|
|
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை
நோக்கி,
|
|
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
|
|
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
|
10
|
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து,
|
|
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
|
|
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
|
|
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
|
|
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
|
15
|
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,
|
|
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
|
|
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
|
|
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
|
|
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
|
20
|
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,
|
|
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
|
|
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
|
|
ஆடிய பின்னும், வாடிய மேனி
|
|
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
|
25
|
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,
|
|
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
|
|
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
|
|
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
|
|
கான் கெழு நாடன் கேட்பின்,
|
30
|
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச்
சொல்லியது; தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய
காமக்கண்ணியார்
|
|
உரை |
|
அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
|
|
புரையப் பூண்ட கோதை மார்பினை,
|
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
|
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
|
5
|
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த
|
|
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
|
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
|
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
|
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
|
10
|
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்
|
|
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
|
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
|
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
|
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன
|
15
|
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்
|
|
வைகுறு விடியல் போகிய எருமை
|
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
|
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!
|
தோழி வரைவு கடாயது. -
உலோச்சனார்
|
|
உரை |
|
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
|
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
|
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
|
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
|
5
|
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
|
|
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
|
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல
|
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
|
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
|
10
|
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,
|
|
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
|
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
|
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
|
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
|
15
|
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
|
|
ஆய் தொடி அரிவை கூந்தற்
|
|
போது குரல் அணிய வேய்தந்தோயே!
|
வினை முற்றி மீளும்
தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன்
இளநாகனார்
|
|
உரை |
|
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
|
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
|
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
|
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு
தின்று
|
5
|
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
|
|
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
|
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
|
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
|
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
|
10
|
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
|
|
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
|
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
|
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
|
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
|
15
|
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
|
|
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
|
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
|
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
|
|
மாலை இன் துணைஆகி, காலைப்
|
20
|
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
|
|
மண மனை கமழும் கானம்
|
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
|
தோழி தலைமகள் குறிப்பு
அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.-
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
|
|
உரை |
|
புணர்ந்தோர் புன்கண் அருளலும்
உணர்ந்தோர்க்கு
|
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
|
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
|
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
|
5
|
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப,
|
|
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
|
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
|
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
|
10
|
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்
|
|
அருளான் வாழி, தோழி! அல்கல்
|
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
|
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
|
|
காயா மென் சினை தோய நீடிப்
|
15
|
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
|
|
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
|
|
கை ஆடு வட்டின் தோன்றும்
|
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி
சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
|
|
உரை |
|
அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
|
|
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
|
|
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
|
|
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
|
5
|
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல்
|
|
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
|
|
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
|
|
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
|
|
இருந்தனமாக, எய்த வந்து,
|
10
|
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே!
|
|
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
|
|
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும்
இக்
|
|
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'
|
|
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
|
15
|
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி,
|
|
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
|
|
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென.
|
|
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
|
|
காணாமோ?' எனக் காலின் சிதையா,
|
20
|
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்
|
|
என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்!
|
|
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
|
|
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன்
|
|
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
|
25
|
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே.
|
தோழி செவிலித்தாய்க்கு
அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார்
|
|
உரை |
|
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
|
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
|
|
வருவர் வாழி, தோழி! அரச
|
|
யானை கொண்ட துகிற் கொடி போல,
|
5
|
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
|
|
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
|
|
மழை என மருண்ட மம்மர் பல உடன்
|
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
|
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
|
10
|
அத்தக் கேழல் அட்ட நற் கோள்
|
|
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
|
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
|
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
|
|
புண் தேர் விளக்கின், தோன்றும்
|
15
|
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
|
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
|
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
|
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
|
5
|
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
|
|
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
|
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
|
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
|
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
|
10
|
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
|
|
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
|
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
|
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
|
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
|
15
|
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
|
|
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
|
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
|
|
நொதுமல் விருந்தினம் போல, இவள்
|
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
|
இரவுக்குறி வந்த தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு
கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர்
கிழார்
|
|
உரை |
|
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
|
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
|
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
|
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
|
5
|
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
|
|
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
|
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
|
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
|
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
|
10
|
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
|
|
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும்,
கையிகந்து
|
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
|
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
|
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
|
15
|
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
|
|
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
|
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
|
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
|
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
உரை |
|
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
|
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
|
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
|
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
|
5
|
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு
|
|
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
|
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
|
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
|
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
|
10
|
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி
|
|
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
|
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
|
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
|
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
|
15
|
அன்றில் அகவும் ஆங்கண்,
|
|
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?
|
தோழி, பகற்குறிக்கண்
தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. -
நக்கீரனார்
|
|
உரை |
|
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
|
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
|
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
|
|
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
|
5
|
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
|
|
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
|
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
|
|
கடாஅம் மாறிய யானை போல,
|
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
|
10
|
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
|
|
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
|
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
|
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
|
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற
|
15
|
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
|
|
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
|
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
|
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
|
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
|
20
|
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
|
|
பீடு இல் மன்னர் போல,
|
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
|
தலைமகன் வினை முற்றி
மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச்
சொல்லியது. -பரணர்
|
|
உரை |
|
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
|
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
|
|
வலம் படு முரசிற் சேரலாதன்
|
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
|
5
|
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
|
|
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
|
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
|
|
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
|
10
|
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
|
|
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
|
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
|
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
|
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
|
15
|
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
|
|
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
|
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
|
பிரிவிடை ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
உரை |
|
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
|
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
|
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
|
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
|
5
|
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
|
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
|
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
|
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
|
10
|
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
|
|
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
|
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
|
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
|
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
|
15
|
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு
கதுப்பின்,
|
|
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என
|
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
|
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார் |
|
உரை |
|
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,
|
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
|
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,
|
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
|
5
|
வால் நிணப் புகவின், கானவர் தங்கை
|
|
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
|
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,
|
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப!
|
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
|
10
|
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
|
|
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
|
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
|
|
இருங் கவுட் கடாஅம் கனவும்,
|
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.
|
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார்
|
|
உரை |
|
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
|
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
|
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
|
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
|
5
|
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
|
|
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
|
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
|
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
|
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
|
10
|
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
|
|
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
|
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
|
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
|
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
|
15
|
நல் எழில் நெடு வேய் புரையும்
|
|
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
|
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர்
|
முதுகூத்தனார்
|
|
உரை |
|
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
|
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
|
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
|
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
|
5
|
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
|
|
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
|
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை
முழங்கும்
|
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
|
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
|
10
|
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
|
|
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
|
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
|
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
|
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
|
15
|
தண் கமழ் நீலம் போல,
|
|
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை
கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி
சாத்தனார்
|
|
உரை |
|
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
|
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
|
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
|
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
|
5
|
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;
|
|
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
|
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
|
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம்
பட்டென,
|
|
காணிய செல்லாக் கூகை நாணி,
|
10
|
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை
|
|
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
|
|
மாலை, வருதல் வேண்டும் சோலை
|
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
|
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.
|
பகல் வருவானை 'இரவு வருக'
என்றது. - பரணர்
|
|
உரை |
|
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
|
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
|
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
|
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
|
5
|
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
|
|
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
|
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
|
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
|
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
|
10
|
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
|
|
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
|
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
|
|
'வாரார்கொல்?' எனப் பருவரும்
|
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!
|
பகற்குறி வந்து கண்ணுற்று
நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து
உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு
கடாயது. - குறுவழுதியார்
|
|
உரை |
|
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
|
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
|
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்
கதிர்
|
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
|
5
|
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
|
|
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
|
|
தீம் புனல் ஊர! திறவதாகக்
|
|
குவளை உண்கண் இவளும் யானும்
|
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
|
10
|
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
|
|
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
|
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
|
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக
|
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக்
கிடாஅய்
|
15
|
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
|
|
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
|
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த
தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர்
மூலங்கிழார்
|
|
உரை |
|
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
|
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
|
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
|
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
|
5
|
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
|
|
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
|
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
|
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
|
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
|
10
|
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
|
|
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
|
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
|
|
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
|
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
|
15
|
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
|
|
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
|
|
எந்தையும் இல்லன் ஆக,
|
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி செவிலித்தாய்க்குச்
சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச்
சொல்லியது. - கபிலர்
|
|
உரை |
|
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
|
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
|
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
|
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
|
5
|
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
|
|
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
|
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
|
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
|
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
|
10
|
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
|
|
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
|
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
|
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
|
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
|
15
|
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்
|
|
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
|
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
|
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
|
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
|
20
|
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
|
|
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க்
கவுதமன் சாதேவனார்
|
|
உரை |
|
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
|
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
|
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
|
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
|
5
|
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
|
|
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
|
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
|
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
|
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
|
10
|
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
|
|
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
|
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
|
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
|
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
|
15
|
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
|
|
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
|
|
அரவச் சீறூர் காண,
|
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.
|
தோழி வரைவு மலிந்து
சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்
|
|
உரை |
|
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி
|
|
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
|
|
அடி அமை பகழி ஆர வாங்கி;
|
|
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
|
5
|
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி
|
|
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
|
|
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
|
|
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
|
|
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு
|
10
|
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்,
|
|
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
|
|
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
|
|
நல் வரல் இள முலை நனைய;
|
|
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.
|
பிரிவுணர்த்திய தோழி,
தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே
உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று,
தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப்
புல்லங்கண்ணனார்
|
|
உரை |
|
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
|
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
|
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
|
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
|
5
|
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
|
|
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
|
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
|
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
|
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
|
10
|
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப,
|
|
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
|
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
|
|
கானவர் மடிந்த கங்குல்;
|
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?
|
இரவுக்குறி வந்த தலைமகனை
இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது.
-கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
|
|
உரை |
|
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்
|
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
|
|
பணை எழில் அழிய வாடும்; நாளும்
|
|
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது
|
5
|
இனையல் வாழி, தோழி! புணர்வர்
|
|
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள்
புரிந்து
|
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
|
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
|
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
|
10
|
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை
|
|
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,
|
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
|
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய,
|
|
கருங் கோட்டு இருப்பை ஊரும்
|
15
|
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
-கல்லாடனார்
|
|
உரை |
|
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
|
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
|
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என,
|
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
|
5
|
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை
|
|
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
|
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
|
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
|
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
|
10
|
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை
|
|
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
|
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
|
|
நல் மணல் வியலிடை நடந்த
|
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
|
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
|
|
வீ ததை கானல் வண்டல் அயர,
|
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
|
5
|
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை
|
|
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
|
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
|
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
|
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
|
10
|
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன்
|
|
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
|
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
|
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப்
|
|
பொன் நேர் நுண் தாது நோக்கி,
|
15
|
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.
|
இரந்து பின்னின்ற
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி
தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க்
கண்ணம்பாளனார்
|
|
உரை |
|
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
|
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
|
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
|
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
|
5
|
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
|
|
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
|
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
|
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
|
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
|
10
|
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
|
|
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
|
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
|
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
|
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
|
15
|
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
|
|
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
|
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
|
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
|
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
|
20
|
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
|
|
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
|
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
|
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
|
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
|
25
|
அணங்குசால், அரிவை இருந்த
|
|
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
|
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
|
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
|
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
|
5
|
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
|
|
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
|
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து
அவர்
|
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
|
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
|
10
|
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
|
|
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
|
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
|
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
|
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
|
15
|
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
|
|
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
|
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக்
கந்தரத்தனார்
|
|
உரை |
|
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
|
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
|
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
|
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
|
5
|
பொறித்த போலும் வால் நிற எருத்தின்,
|
|
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
|
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
|
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
|
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
|
10
|
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
|
|
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
|
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
|
|
முருந்து ஏர் முறுவல், இளையோள்
|
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.
|
பொருள் வலித்த
நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக்
|
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது,
|
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
|
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
|
5
|
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை
|
|
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
|
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
|
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
|
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
|
10
|
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,
|
|
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
|
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
|
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
|
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
|
15
|
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்,
|
|
ஏர் மலர் நிறை சுனை உறையும்
|
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே!
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது
போக்கு நோக்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
|
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
|
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
|
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
|
5
|
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்
|
|
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
|
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
|
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
|
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
|
10
|
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
|
|
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
|
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
|
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல்
|
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும்
|
15
|
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
|
|
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
|
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
|
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
|
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
|
20
|
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
|
|
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
|
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
|
|
இழந்த நாடு தந்தன்ன
|
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
உரை |
|
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
|
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி
|
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
|
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
|
5
|
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
|
|
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
|
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
|
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
|
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
|
10
|
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
|
|
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
|
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
|
|
தண்டலை கமழும் கூந்தல்,
|
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
காமக்கணி நப்பாலத்தனார்
|
|
உரை |
208. குறிஞ்சி |
|
யாம இரவின் நெடுங் கடை நின்று,
|
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
|
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
|
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
|
5
|
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
|
|
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
|
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
|
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
|
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள்
ஒருங்கு
|
10
|
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
|
|
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
|
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
|
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
|
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
|
15
|
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
|
|
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
|
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
|
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
|
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
|
20
|
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
|
|
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
|
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
|
|
கார் மலர் கடுப்ப நாறும்,
|
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே!
|
புணர்ந்து நீங்கும் தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
தா இல் நல் பொன் தைஇய பாவை
|
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
|
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
|
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
|
5
|
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,
|
|
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
|
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
|
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
|
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
|
10
|
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,
|
|
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
|
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
|
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
|
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
|
15
|
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
|
|
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க்
குட்டுவன்
|
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
|
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
|
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
|
20
|
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
|
|
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
|
|
எளியள் அல்லோட் கருதி,
|
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.
|
அல்லகுறிப்பட்டு நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லியது. -பரணர்
|
|
உரை |
|
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
|
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
|
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
|
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
|
5
|
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
|
|
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
|
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
|
|
அமரும் நம் வயினதுவே; நமர் என
|
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
|
10
|
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
|
|
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
|
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
|
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
|
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
|
15
|
மாரி மாலையும் தமியள் கேட்டே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன்
பேரி சாத்தனார்
|
|
உரை |
|
செல்க, பாக! எல்லின்று பொழுதே
|
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
|
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
|
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
|
5
|
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி,
|
|
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
|
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
|
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
|
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
|
10
|
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,
|
|
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
|
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
|
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
|
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
|
15
|
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என,
|
|
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
|
|
அருங் கடி வியல் நகர் நோக்கி,
|
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர்
மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்
சாத்தனார்
|
|
உரை |
|
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
|
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
|
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
|
|
இன்றே இவணம் ஆகி, நாளை,
|
5
|
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
|
|
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
|
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார்
கோல்
|
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
|
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
|
10
|
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
|
|
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
|
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
|
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
|
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
|
15
|
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
செறி தொடி முன்கை, நம் காதலி
|
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
உரை |
|
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
|
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
|
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
|
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
|
5
|
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!
|
|
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
|
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
|
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
|
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
|
10
|
தீதும் உண்டோ, மாதராய்?' என,
|
|
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
|
|
கை வல் பாகன் பையென இயக்க,
|
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
|
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
|
15
|
சிறிய இறைஞ்சினள், தலையே
|
|
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
உரை |
|
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
|
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
|
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
|
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
|
5
|
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
|
|
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
|
|
கால் என மருள, ஏறி, நூல் இயல்
|
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
|
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
|
10
|
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை
|
|
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
|
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
|
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
|
|
எல்லை போகிய புல்லென் மாலை,
|
15
|
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,
|
|
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
|
|
நல் நிறம் பரந்த பசலையள்
|
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - பேயனார்
|
|
உரை |
|
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
|
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
|
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
|
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
|
5
|
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
|
|
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
|
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
|
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
|
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
|
10
|
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
|
|
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
|
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
|
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
|
|
நெருநலும் தீம் பல மொழிந்த
|
15
|
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
உரை |
|
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
|
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
|
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
|
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
|
5
|
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை
|
|
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
|
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
|
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன்
|
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
|
10
|
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப்
|
|
பாணன் வந்தனன், தூதே; நீயும்
|
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
|
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
|
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை.......மள்ளனார்
|
|
உரை |
|
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
|
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
|
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
|
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
|
5
|
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,
|
|
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
|
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
|
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
|
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
|
10
|
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்
|
|
கான யானை வெண் கோடு சுட்டி,
|
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
|
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
|
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
|
15
|
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
|
|
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
|
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
|
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
|
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
|
20
|
அம் மா அரிவை ஒழிய,
|
|
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
|
|
செம் முது செவிலியர் பல பாராட்ட,
|
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
|
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
|
5
|
மனை உறை புறவின் செங் காற் சேவல்
|
|
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
|
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
|
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
|
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
|
10
|
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,
|
|
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
|
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
|
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
|
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
|
15
|
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
|
|
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
|
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
|
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
|
|
தார் மணி மா அறிவுறாஅ,
|
20
|
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!
|
வினை முற்றி வந்து எய்திய
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
உரை |
|
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
|
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
|
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
|
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
|
5
|
பொம்மல் ஓதி பொதுள வாரி,
|
|
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
|
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
|
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
|
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
|
10
|
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
|
|
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
|
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
|
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
|
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
|
15
|
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
|
|
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
|
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
|
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
|
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
|
20
|
வெள் அரா மிளிர வாங்கும்
|
|
பிள்ளை எண்கின் மலைவயினானே.
|
உடன் போகாநின்ற
தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர்
மருத்துவன் தாமோதரனார்
|
|
உரை |
|
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
|
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
|
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும்,
அன்னோட்
|
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
|
5
|
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
|
|
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
|
|
மாய இருள் அளை மாய் கல் போல,
|
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
|
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
|
10
|
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
|
|
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
|
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
|
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
|
|
காமம் கைம்மிக உறுதர,
|
15
|
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!
|
அல்லகுறிப்பட்டுப்
பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பரணர்
|
|
உரை |
|
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
|
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
|
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
|
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
|
5
|
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச்
|
|
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
|
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
|
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
|
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
|
10
|
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,
|
|
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
|
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
|
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
|
|
வில்லோர் குறும்பில் ததும்பும்,
|
15
|
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.
|
புணர்ந்து உடன் போயின காலை,
இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த
காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
|
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
|
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
|
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
|
5
|
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து,
அருளாது,
|
|
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
|
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
|
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
|
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
|
10
|
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
|
|
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
|
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
|
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
|
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
|
15
|
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
|
|
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
|
|
கொண்டல் மா மலை நாறி,
|
|
அம் தீம் கிளவி வந்தமாறே.
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப்
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
|
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
|
|
பருவம் செய்த பானாட் கங்குல்,
|
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
|
5
|
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
|
|
திண் கால் உறியன், பானையன், அதளன்,
|
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
|
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
|
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
|
10
|
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
|
|
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
|
|
தண் நறு புறவினதுவே நறு மலர்
|
|
முல்லை சான்ற கற்பின்
|
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - இடைக் காடனார்
|
|
உரை |
|
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
|
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
|
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
|
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
|
5
|
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை
கொடுப்பினும்,
|
|
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
|
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
|
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
|
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும், |
10
|
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம்,
இருப்பின்,
|
|
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
|
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
|
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
|
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
|
தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பட்டுப்
போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், -
அம்மூவனார்
|
|
உரை |
|
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
|
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
|
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
|
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
|
5
|
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,
|
|
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
|
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
|
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
|
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
|
10
|
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
|
|
காமர் புறவினதுவே காமம்
|
|
நம்மினும் தான் தலைமயங்கிய
|
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
இடைக்காடனார்
|
|
உரை |
|
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
|
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
|
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
|
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
|
5
|
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்
|
|
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
|
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
|
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
|
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
|
10
|
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,
|
|
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
|
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
|
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
|
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -
குடவாயிற்கீரத்தனார்
|
|
உரை |
|
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
|
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
|
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
|
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
|
5
|
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
|
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
|
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
|
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
|
10
|
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
|
|
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத்
தெறிப்ப,
|
|
மை அற விரிந்த படை அமை சேக்கை
|
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
|
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
|
15
|
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
|
|
'நல்ல கூறு' என நடுங்கி,
|
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
உரை |
|
வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
|
|
உலறி இலை இலவாக, பல உடன்
|
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
|
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
|
5
|
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப்
|
|
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
|
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப்
பரல்,
|
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
|
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
|
10
|
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த்
|
|
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
|
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
|
|
உவலை சூடிய தலையர், கவலை
|
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின்,
யாவதும்
|
15
|
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர
|
|
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள்
காய்
|
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
|
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
|
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
|
20
|
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம்
|
|
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
|
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
|
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி
|
25
|
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண்
கவினே.
|
பொருள்வயிற் போகாநின்ற
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
|
உரை |
|
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
|
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
|
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
|
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
|
5
|
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி,
|
|
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
|
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
|
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
|
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
|
10
|
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
|
|
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
|
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
|
|
எழுதியன்ன கொடி படு வெருகின்
|
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
|
15
|
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்
|
|
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
|
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
|
|
வெரு வரு கானம், நம்மொடு,
|
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
|
பொருள்வயிற் போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
|
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
|
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
|
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
|
5
|
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை
|
|
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
|
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
|
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
|
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
|
10
|
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு
உரைத்தென,
|
|
வைகு நிலை மதியம் போல, பையென,
|
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
|
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
|
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
|
15
|
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,
|
|
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
|
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
|
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல்
மாண்டு
|
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
|
20
|
பருவரல் எவ்வமொடு அழிந்த
|
|
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.
|
இடைச் சுரத்துப் போகாநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
-எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
உரை |
|
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
|
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
|
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
|
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
|
5
|
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
|
|
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
|
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
|
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
|
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
|
10
|
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
|
|
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
|
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
|
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
|
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
|
15
|
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
|
|
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
|
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
|
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
|
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
|
20
|
நம் நோய் தன்வயின் அறியாள்,
|
|
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
|
|
உரை |
|
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
|
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
|
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
|
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
|
5
|
பாம்பு எறி கோலின் தமியை வைகி,
|
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
|
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
|
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
|
10
|
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
|
|
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
|
|
|
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
|
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
|
15
|
புகல் அரும், பொதியில் போலப்
|
|
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!
|
அல்லகுறிப்பட்டுப் போகின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
உரை |
|
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
|
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
|
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
|
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
|
5
|
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால்
வீழ்த்து,
|
|
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
|
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
|
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
|
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
|
10
|
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
|
|
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
|
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
|
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
|
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
|
15
|
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
|
|
பொலிவன அமர்த்த உண்கண்,
|
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
கூத்தனார்
|
|
உரை |
|
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
|
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
|
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
|
|
யானும் அறிவென்மன்னே; யானை தன்
|
5
|
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
|
|
இன்னா வேனில் இன் துணை ஆர,
|
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
|
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
|
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
|
10
|
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
|
|
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
|
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
|
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து
யாத்த
|
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
|
15
|
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
|
|
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
|
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
|
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
|
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
|
20
|
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
|
|
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
|
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
|
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
|
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
|
25
|
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
|
|
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு
அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
|
|
உரை |
|
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
|
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
|
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
|
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
|
5
|
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
|
|
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
|
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
|
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
|
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
|
10
|
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
|
|
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
|
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
|
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
|
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
|
15
|
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
|
|
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
|
|
கள்ளி நீழல் கதறுபு வதிய,
|
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
|
|
எமியம் கழிதந்தோயே பனி இருள்
|
20
|
பெருங் கலி வானம் தலைஇய
|
|
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
|
முன்னொரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன்
பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச்
சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
|
|
மறம் கெழு தானை அரசருள்ளும்,
|
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
|
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி
தோள்,
|
5
|
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் |
|
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
|
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
|
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
|
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
|
10
|
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
|
|
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
|
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
|
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
|
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
|
15
|
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
|
|
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
|
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
|
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
|
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி
பாக்கத்து,
|
20
|
வழங்கல் ஆனாப் பெருந் துறை
|
|
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
உரை |
|
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
|
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
|
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
|
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
|
5
|
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட
|
|
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
|
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
|
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
|
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
|
10
|
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;
|
|
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
|
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
|
|
வாழ்தல் அன்ன காதல்,
|
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே!
|
போகாநின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி
நெட்டையார்
|
|
உரை |
|
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
|
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு
யான்
|
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
|
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
|
5
|
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
|
|
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
|
|
ஏவல் இளையர் தலைவன், மேவார்
|
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
|
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
|
10
|
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
|
|
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
|
|
வரையரமகளிரின் அரியள்,
|
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
உரை |
|
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்
தோள்,
|
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
|
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
|
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
|
5
|
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
|
|
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
|
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
|
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
|
10
|
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,
|
|
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
|
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
|
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக்
களைந்த
|
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
|
15
|
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து
நின்று
|
|
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
|
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
|
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
|
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக்
கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை
மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
|
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
|
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
|
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
|
5
|
கை மாண் தோணி கடுப்ப, பையென,
|
|
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
|
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
|
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
|
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
|
10
|
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
|
|
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! |
|
பயப்புறு படர் அட வருந்திய
|
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
|
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
|
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
|
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
|
5
|
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
|
|
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
|
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
|
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
|
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
|
10
|
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
|
|
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
|
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத்
தெறிப்ப,
|
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
|
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
|
15
|
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
|
|
உள்ளுதொறு படூஉம் பல்லி,
|
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
|
பொருள் முற்றி
மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்
|
|
உரை |
|
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
|
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
|
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
|
|
நாளது செலவும், மூப்பினது வரவும்,
|
5
|
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
|
|
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
|
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
|
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
|
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
|
10
|
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
|
|
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
|
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
|
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
|
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
|
15
|
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
|
|
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
|
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
|
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
|
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
|
20
|
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
|
|
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
|
|
நம்மொடு நன் மொழி நவிலும்
|
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
|
முன் ஒரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள்
முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள்
கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
|
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
|
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
|
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
|
5
|
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
|
|
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
|
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
|
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
|
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
|
10
|
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
|
|
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
|
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
|
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
|
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
|
15
|
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
|
|
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - எயினந்தை மகனார்
இளங்கீரனார்
|
|
உரை |
|
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
|
|
சினவல் போகிய புன்கண் மாலை,
|
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த
|
5
|
கான யானைக் கதுவாய் வள் உகிர்,
|
|
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
|
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
|
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
|
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
|
10
|
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
|
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
|
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
|
|
தண் கமழ் புது மலர் நாறும்
|
15
|
|
தலைமகன் இடைச் சுரத்து நின்று
சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
|
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
|
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
|
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
|
5
|
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
|
|
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய்
கூர்ந்து,
|
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
|
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
|
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
|
10
|
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
|
|
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
|
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
|
|
வீ தேர் பறவை விழையும்
|
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
உரை |
|
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
|
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
|
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
|
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
|
5
|
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு
நினைந்து,
|
|
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
|
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
|
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
|
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
|
10
|
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
|
|
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
|
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
|
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
|
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
|
15
|
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து,
|
|
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
|
அல்லகுறிப்பட்டுப்
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர்
எழுந்து,
|
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
|
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
|
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
|
5
|
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,
|
|
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
|
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
|
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
|
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
|
10
|
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,
|
|
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
|
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
|
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
|
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார்
அரிப் பனி
|
15
|
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்
|
|
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
|
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
|
|
ஓர் எயில் மன்னன் போல,
|
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!
|
பிரிந்து போகாநின்ற
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பாண்டியன் ஏனாதி
நெடுங்கண்ணனார்
|
|
உரை |
|
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
|
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
|
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
|
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
|
5
|
தாழ்ந்த போல நனி அணி வந்து,
|
|
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
|
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
|
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
|
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
|
10
|
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,
|
|
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
|
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
|
|
மணி மண்டு பவளம் போல, காயா
|
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
|
15
|
கார் கவின் கொண்ட காமர் காலை,
|
|
செல்க, தேரே நல் வலம் பெறுந!
|
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
|
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!
|
பாசறை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
இடைக்காடனார்
|
|
உரை |
|
கோடை நீடலின், வாடு புலத்து உக்க
|
|
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
|
|
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
|
|
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
|
5
|
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,
|
|
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
|
|
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
|
|
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
|
|
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
|
10
|
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்
|
|
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
|
|
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
|
|
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
|
|
நசை தர வந்தோர் இரந்தவை
|
15
|
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே!
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
|
|
உரை |
|
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
|
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
|
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள்
புரிந்து,
|
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
|
5
|
நினையினைஆயின், எனவ கேண்மதி!
|
|
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
|
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
|
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
|
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
|
10
|
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,
|
|
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
|
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
|
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள்
சேர்பு,
|
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
|
15
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின்
|
|
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
|
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
|
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
|
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
|
20
|
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,
|
|
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
|
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
|
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு
நின்று,
|
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
|
25
|
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த
|
|
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
|
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?
|
முன் ஒரு காலத்துப் பொருள்
முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. -
பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
|
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
|
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
|
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
|
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
|
5
|
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர்
மண்டிலம்
|
|
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
|
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
|
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
|
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
|
10
|
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
|
|
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
|
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
|
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
|
|
முனை அரண் கடந்த வினை வல் தானை,
|
15
|
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
|
|
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
|
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது
உயிர்த்து,
|
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
|
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
|
20
|
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
இளங்கௌசிகனார்
|
|
உரை |
|
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
|
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
|
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
|
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
|
5
|
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,
|
|
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
|
|
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
|
|
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
|
|
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
|
10
|
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
|
|
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
|
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
|
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
|
|
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
|
15
|
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
|
|
|
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!
|
தலைமகன் பாங்கற்குச்
சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம்
ஆம். - அம்மூவனார்
|
|
உரை |
மேல் |