நற்றாய்
|
|
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
|
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
|
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
|
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
|
5
|
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
|
|
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
|
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
|
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
|
|
தோழிமாரும் யானும் புலம்ப,
|
10
|
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
|
|
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
|
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
|
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
|
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
|
15
|
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
|
|
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
|
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
|
|
குன்ற வேயின் திரண்ட என்
|
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
|
மகட்போக்கிய
தாய்சொல்லியது. - மாமூலனார்
|
|
உரை |
|
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
|
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
|
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
|
|
விளி முறை அறியா வேய் கரி கானம்,
|
5
|
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
|
|
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து
யாம்
|
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
|
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
|
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
|
10
|
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
|
|
பொருது புண் நாணிய சேரலாதன்
|
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
|
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
|
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
|
15
|
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
|
|
காதல் வேண்டி, எற் துறந்து
|
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு
இரங்கிய தாய் தெருட்டும்
அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்
|
|
உரை |
|
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
|
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
|
|
நல் வரை நாடன் தற்பாராட்ட
|
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
|
5
|
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,
|
|
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
|
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
|
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்
மருண்டு,
|
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
|
10
|
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி
|
|
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
|
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து
|
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
|
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
|
15
|
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்
|
|
முகை தலை திறந்த வேனிற்
|
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - தாயங்கண்ணனார்
|
|
உரை |
|
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள்
|
|
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே,
|
|
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
|
|
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
|
5
|
உவந்து, இனிது அயரும் என்ப; யானும்,
|
|
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
|
|
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
|
|
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
|
|
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
|
10
|
நலம் புனை உதவியும் உடையன்மன்னே;
|
|
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
|
|
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
|
|
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
|
|
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
|
15
|
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்;
|
|
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
|
|
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
|
|
எம் மனை முந்துறத் தருமோ?
|
|
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?
|
மகட் போக்கிய நற்றாய்
சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
|
|
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
|
|
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
|
|
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள்
|
5
|
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு
அறியேன்,
|
|
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும்
|
|
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
|
|
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
|
|
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால்
|
10
|
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,
|
|
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
|
|
அன்னேன் அன்மை நன் வாயாக,
|
|
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
|
|
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
|
15
|
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,
|
|
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
|
|
நுனை குழைத்து அலமரும் நொச்சி
|
|
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கபிலர்
|
|
உரை |
|
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
|
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
|
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
|
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
|
5
|
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்
|
|
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
|
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
|
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
|
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
|
10
|
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்
|
|
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
|
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
|
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
|
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
|
15
|
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,
|
|
மறுத்த சொல்லள் ஆகி,
|
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
சேந்தம்பூதனார்
|
|
உரை |
|
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
|
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
|
|
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப்
|
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
|
5
|
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,
|
|
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால்,
|
|
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி,
|
|
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து,
யான்
|
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக்
குறுமகள்
|
10
|
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என,
|
|
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
|
|
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
|
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
|
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
|
15
|
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்
|
|
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
|
|
மடத் தகை மெலியச் சாஅய்,
|
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே.
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,
|
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,
|
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,
|
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,
|
5
|
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
|
|
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
|
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,
|
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்
|
|
காணலாகா மாண் எழில் ஆகம்
|
10
|
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே
|
|
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின்,
|
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்,
|
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்,
|
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து,
|
15
|
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,
|
|
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை
|
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
|
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து,
|
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல்
|
20
|
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள்
|
|
நல் எழில் சிதையா ஏமம்
|
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது.
-மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத்
தோன்றி,
|
|
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
|
|
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
|
|
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
|
5
|
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,
|
|
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
|
|
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
|
|
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
|
|
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
|
10
|
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!
|
|
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
|
|
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
|
|
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
|
|
திரு நுதல் பொலிந்த என் பேதை
|
15
|
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்
|
|
உரை |
|
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
|
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
|
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
|
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
|
5
|
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
|
|
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
|
|
மழலை இன் சொல், கழறல் இன்றி,
|
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
|
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
|
10
|
ஏதிலாளன் காதல் நம்பி,
|
|
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
|
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
|
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
|
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
|
15
|
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
|
|
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
|
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
|
|
செம் புடைச் சிறு விரல் வரித்த
|
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
|
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
|
|
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண்
|
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
|
5
|
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
|
|
அறியாமையின் செறியேன், யானே;
|
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
|
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
|
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
|
10
|
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்
|
|
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய்,
|
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
|
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
|
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
|
15
|
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
|
|
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
|
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
|
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்
|
|
உரை |
|
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
|
|
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
|
|
காடும் கானமும் அவனொடு துணிந்து,
|
|
நாடும் தேயமும் நனி பல இறந்த
|
5
|
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,
|
|
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
|
|
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
|
|
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
|
|
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
|
10
|
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,
|
|
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
|
|
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
|
|
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
|
|
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித்
தேர்ப்
|
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
|
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
|
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
|
5
|
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
|
|
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
|
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
|
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
|
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
|
10
|
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
|
|
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
|
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
|
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
|
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு,
நின்
|
15
|
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
|
|
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
|
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
|
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
|
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை தலைமகற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
மேல் |