செவிலித்தாய்
|
|
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
|
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
|
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
|
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
|
5
|
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
|
|
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
|
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
|
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
|
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
|
10
|
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!
|
|
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
|
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என்
மகள்
|
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
|
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
|
15
|
பிற்படு பூசலின் வழிவழி ஓடி,
|
|
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
|
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
|
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
|
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
|
20
|
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
|
|
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
|
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று,
நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. -
கயமனார்.
|
|
உரை |
|
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது
எறியினும்,
|
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
|
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
|
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
|
5
|
முயங்கினள் வதியும்மன்னே! இனியே,
|
|
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
|
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
|
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
|
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
|
10
|
வல்லகொல், செல்லத் தாமே கல்லென
|
|
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
|
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
|
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி
|
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
|
15
|
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல்,
|
|
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
|
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
|
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
|
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
|
20
|
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
|
|
வைகுறு மீனின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
|
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
|
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
|
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து
யாத்த
|
5
|
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
|
|
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
|
|
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
|
|
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
|
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
|
10
|
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,
|
|
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
|
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
|
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
|
|
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
|
15
|
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
|
|
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
|
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
|
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!
|
உடன்போயின தலைமகளை
நினைந்து, செவிலித்தாய் மனையின்கண்
வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்
|
|
உரை |
|
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
|
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
|
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
|
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
|
5
|
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
|
|
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில்
எறிப்ப,
|
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
|
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
|
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
|
10
|
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
|
|
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
|
|
கறவை தந்த கடுங் கால் மறவர்
|
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
|
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
|
15
|
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
|
|
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
|
|
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
|
|
சேக் கோள் அறையும் தண்ணுமை
|
|
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே.
|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல,
செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க்
கண்ணம்புல்லனார்
|
|
உரை |
|
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
|
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
|
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
|
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
|
5
|
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
|
|
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
|
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
|
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
|
|
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
|
10
|
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
|
|
மை படு திண் தோள் மலிர வாட்டி,
|
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
|
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
|
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
|
15
|
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,
|
|
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
|
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
|
|
மெல்லென் சேவடி மெலிய ஏக
|
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
|
20
|
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
|
|
இடு மணற் பந்தருள் இயலும்,
|
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. -
மதுரைக்காஞ்சிப் புலவர்
|
|
உரை |
|
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
|
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
|
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
|
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
|
5
|
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
|
|
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
|
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
|
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
|
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
|
10
|
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
|
|
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
|
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
|
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
|
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
|
15
|
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
|
|
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
|
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
|
|
வாணன் சிறுகுடி வடாஅது
|
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல்
போன்றே?
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - .........
|
|
உரை |
|
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
|
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
|
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
|
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
|
5
|
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன்
காட்டு
|
|
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
|
|
வாள்வரி பொருத புண் கூர் யானை
|
|
புகர் சிதை முகத்த குருதி வார,
|
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
|
10
|
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
|
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
|
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
|
15
|
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
|
|
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
|
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
|
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
|
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
|
20
|
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
|
|
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
|
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
|
|
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
|
|
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
|
|
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
|
5
|
வன்கணாளன் மார்புஉற வளைஇ,
|
|
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
|
|
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
|
|
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
|
|
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
|
10
|
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்
|
|
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
|
|
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
|
|
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
|
|
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
|
15
|
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,
|
|
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க்
கோங்கின்
|
|
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
|
|
கை விடு சுடரின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொற்றது. - சேரமான்
இளங்குட்டுவன்
|
|
உரை |
|
பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
|
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
|
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
|
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
|
5
|
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி,
|
|
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
|
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென,
|
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற,
|
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
|
10
|
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்
|
|
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
|
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
|
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
|
|
தேர் ஊர் தெருவில் ததும்பும்
|
15
|
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
பசித்த யானைப் பழங்கண் அன்ன
|
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
|
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
|
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
|
5
|
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
|
|
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன்
சுரைப்
|
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
|
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
|
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
|
10
|
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
|
|
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
|
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
|
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
|
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
|
15
|
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,
|
|
யாய் அறிவுறுதல் அஞ்சி,
|
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
|
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
|
|
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
|
|
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
|
|
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
|
5
|
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
|
|
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
|
|
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன்
சுவர்ப்
|
|
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
|
|
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
|
10
|
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
|
|
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
|
|
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
|
|
கடல்அம் தானை கை வண் சோழர்,
|
|
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
|
15
|
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
|
|
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
|
|
ஓமை நீடிய உலவை நீள் இடை,
|
|
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
|
|
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
|
20
|
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
|
|
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
|
|
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
|
|
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
|
|
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
|
25
|
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
|
மேயினள்கொல்?' என நோவல் யானே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - நக்கீரர்
|
|
உரை |
|
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
|
|
என் ஓரன்ன தாயரும், காண,
|
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
|
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
|
5
|
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர,
|
|
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
|
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
|
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
|
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
|
10
|
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,
|
|
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
|
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
|
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
|
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
|
15
|
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி,
|
|
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
|
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
|
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற்
கீரத்தனார்
|
|
உரை |
|
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
|
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
|
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
|
|
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக்
|
5
|
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
|
|
எளியவாக, ஏந்து கொடி பரந்த
|
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத்
|
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
|
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை
|
10
|
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,
|
|
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
|
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
|
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
|
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங்
கோட்டுக்
|
15
|
கோடை வெவ் வளிக்கு உலமரும்
|
|
புல் இலை வெதிர நெல் விளை காடே.
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
மேல் |