பரத்தை
|
|
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
|
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
|
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
|
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
|
5
|
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
|
|
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
|
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
|
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
|
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
|
10
|
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
|
|
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
|
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
|
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
|
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
|
15
|
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
|
|
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
|
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
|
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
|
20
|
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
|
|
இளமை சென்று தவத் தொல்லஃதே;
|
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி,
எமக்கே?
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்
|
|
உரை |
|
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
|
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
|
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
|
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
|
5
|
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை,
|
|
தாழை தளரத் தூக்கி, மாலை
|
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
|
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
|
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
|
10
|
அறாஅலியரோ அவருடைக் கேண்மை!
|
|
அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
|
|
வாரற்கதில்ல தோழி! கழனி
|
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
|
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
|
15
|
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை
|
|
அகமடல் சேக்கும் துறைவன்
|
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச்
சொல்லியது.- குன்றியனார்
|
|
உரை |
|
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ்
சிறந்து,
|
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
|
|
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
|
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
|
5
|
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,
|
|
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
|
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
|
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
|
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
|
10
|
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின்
நினைந்து
|
|
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
|
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
|
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
|
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
|
15
|
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்
|
|
கல்லாக் கோவலர் ஊதும்
|
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!
|
தலைமகன் பிரிவின்கண்
அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச்
சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்
|
|
உரை |
|
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
|
|
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
|
|
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
|
|
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
|
5
|
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,
|
|
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,
|
|
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
|
|
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
|
|
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
|
10
|
ஆதிமந்தி பேதுற்று இனைய,
|
|
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
|
|
அம் தண் காவிரி போல,
|
|
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.
|
'தலைமகனை நயப்பித்துக்
கொண்டாள்' என்று கழறக் கேட்ட
பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப,
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
|
அம்ம வாழி, தோழி! 'இம்மை
|
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
|
|
தொன்றுபடு பழமொழி இன்று
பொய்த்தன்றுகொல்?
|
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
|
5
|
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
|
|
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
|
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
|
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
|
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
|
10
|
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
|
|
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங்
காட்டு,
|
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
|
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
|
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
|
15
|
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
|
|
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
|
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
|
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி
தோழிக்குச் சொல்லியது; தோழி
கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். -
மாமூலனார்
|
|
உரை |
|
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
|
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
|
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
|
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
|
5
|
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
|
|
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
|
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
|
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
|
|
உலமந்து வருகம் சென்மோ தோழி!
|
10
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
|
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
|
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.
|
தலைமகள் தன்னைப்
புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப்
பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி
வங்கனார்
|
|
உரை |
|
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
|
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
|
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
|
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
|
5
|
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
|
|
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
|
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
|
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
|
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
|
10
|
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
|
|
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
|
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
|
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
|
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
|
15
|
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
|
|
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
|
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
|
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
|
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
|
20
|
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
|
|
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
|
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
|
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
|
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
|
25
|
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
|
|
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
|
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
|
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
|
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. -
நக்கீரர்
|
|
உரை |
|
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
|
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
|
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
|
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில்,
|
5
|
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை,
|
|
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
|
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
|
|
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
|
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என
|
10
|
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின்,
|
|
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
|
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
|
|
புதுவது வந்த காவிரிக்
|
15
|
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?
|
பரத்தையொடு புனலாடிய
தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான்
ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட
பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப,
சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார்
|
|
உரை |
|
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
|
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து
ஈர்க்கும்
|
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
|
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
|
5
|
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும்
|
|
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும்
ஊரனொடு
|
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
|
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
|
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
|
10
|
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
|
|
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
|
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
|
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
|
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
|
15
|
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
|
|
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
|
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
|
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்
|
|
திரு நுதல் பசப்ப நீங்கும்
|
20
|
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி
நெருங்கியது. -பரணர்
|
|
உரை |
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
|
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
|
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
|
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப்
பாட்டி
|
5
|
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
|
|
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
|
|
விடியல் வைகறை இடூஉம் ஊர!
|
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
|
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
|
10
|
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்
போகிய,
|
|
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
|
|
அன்னிமிஞிலியின் இயலும்
|
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்
மகள்
|
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
|
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
|
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
|
5
|
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
|
|
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
|
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
|
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
|
|
கழனி உழவர் குற்ற குவளையும்,
|
10
|
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
|
|
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
|
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
|
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
|
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
|
15
|
பெருங் களிற்று எவ்வம் போல,
|
|
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப்
பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்
|
|
உரை |
|
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
|
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
|
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
|
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
|
5
|
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
|
|
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
|
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
|
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
|
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
|
10
|
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,
|
|
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
|
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
|
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன்
பொருள்போல்,
|
|
பரந்து வெளிப்படாது ஆகி,
|
15
|
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே!
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
|
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
|
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
|
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
|
5
|
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
|
|
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
|
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
|
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
|
|
காஞ்சி நீழல் குரவை அயரும்
|
10
|
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
|
|
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
|
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
|
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
|
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
|
15
|
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
|
|
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
|
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
|
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
|
|
என்னொடு திரியானாயின், வென் வேல்
|
20
|
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
|
|
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
|
|
ஆரியர் படையின் உடைக, என்
|
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
|
நயப் புப்பரத்தை இற்
பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது. - பாவைக் கொட்டிலார்
|
|
உரை |
|
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன்
உடையென்மன்
|
|
கல்லா யானை கடி புனல் கற்றென,
|
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
|
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
|
5
|
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
|
|
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
|
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
|
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
|
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
|
10
|
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
|
|
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
|
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
|
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
|
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
|
15
|
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
|
|
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும்,
பொற்புடைக்
|
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
|
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை புலந்து
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித்
தேர்ப்
|
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
|
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
|
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
|
5
|
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
|
|
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
|
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
|
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
|
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
|
10
|
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
|
|
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
|
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
|
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
|
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு,
நின்
|
15
|
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
|
|
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
|
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
|
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
|
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை தலைமகற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
மேல் |