பாணன்
|
|
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
|
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
|
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
|
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
|
5
|
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
|
|
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
|
|
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
|
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
|
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
|
10
|
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற,
|
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
|
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை
|
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற
|
|
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன்,
|
15
|
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென,
|
|
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
|
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
|
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
|
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
|
20
|
கார் மழை முழக்கு இசை கடுக்கும்,
|
|
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.
|
பாணன் தனக்குப்
பாங்காயினார் கேட்பச் சொல்லியது. -
ஒக்கூர் மாசாத்தனார்
|
|
உரை |
மேல் |