உழையர்
|
|
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
|
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
|
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த
|
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
|
5
|
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்
|
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
|
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால,
|
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
|
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு
தாஅய்,
|
10
|
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
|
|
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
|
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
|
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
|
|
செல்லும், நெடுந்தகை தேரே
|
15
|
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!
|
வினை முற்றிய தலைமகன் கருத்து
உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர்
மாசாத்தியார்
|
|
உரை |
|
மத வலி யானை மறலிய பாசறை,
|
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
|
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
|
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
|
5
|
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல்
விரைந்து,
|
|
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
|
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
|
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
|
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
|
10
|
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
|
|
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
|
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
|
|
போது உறழ் கொண்ட உண்கண்
|
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?
|
வினை முற்றிய தலைமகற்கு
உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க்
கூத்தன் கடுவன் மள்ளனார்
|
|
உரை |
|
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
|
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
|
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
|
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
|
5
|
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில்,
|
|
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
|
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
|
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
|
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
|
10
|
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
|
|
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
|
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
|
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
|
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
|
வினை முற்றிய தலைமகனது வரவு
கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர்
மாசாத்தியார்
|
|
உரை |
மேல் |