அகல் அறை மலர்ந்த
|
|
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
|
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
|
|
நல் வரை நாடன் தற்பாராட்ட
|
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
|
5
|
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,
|
|
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
|
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
|
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்
மருண்டு,
|
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
|
10
|
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி
|
|
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
|
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து
|
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
|
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
|
15
|
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்
|
|
முகை தலை திறந்த வேனிற்
|
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - தாயங்கண்ணனார்
|
|
உரை |
மேல் |