அகல் இரு விசும்பகம்
|
|
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
|
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
|
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
|
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
|
5
|
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
|
|
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
|
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
|
|
அமரும் நம் வயினதுவே; நமர் என
|
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
|
10
|
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
|
|
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
|
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
|
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
|
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
|
15
|
மாரி மாலையும் தமியள் கேட்டே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன்
பேரி சாத்தனார்
|
|
உரை |
மேல் |