அகல் வாய் வானம்
|
|
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
|
|
சினவல் போகிய புன்கண் மாலை,
|
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த
|
5
|
கான யானைக் கதுவாய் வள் உகிர்,
|
|
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
|
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
|
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
|
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
|
10
|
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
|
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
|
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
|
|
தண் கமழ் புது மலர் நாறும்
|
15
|
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே.
|
தலைமகன் இடைச் சுரத்து நின்று
சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
மேல் |