அணங்குடை முந்நீர்
|
|
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
|
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
|
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
|
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
|
5
|
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்
|
|
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
|
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
|
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
|
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
|
10
|
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்
|
|
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
|
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
|
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
|
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
|
15
|
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,
|
|
மறுத்த சொல்லள் ஆகி,
|
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
சேந்தம்பூதனார்
|
|
உரை |
மேல் |