அத்தப் பாதிரித் துய்த் தலைப்
|
|
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
|
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
|
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
|
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
|
5
|
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
|
|
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
|
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து
அவர்
|
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
|
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
|
10
|
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
|
|
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
|
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
|
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
|
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
|
15
|
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
|
|
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
|
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக்
கந்தரத்தனார்
|
|
உரை |
மேல் |