அம்ம வாழி தோழி இம்மை
|
|
அம்ம வாழி, தோழி! 'இம்மை
|
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
|
|
தொன்றுபடு பழமொழி இன்று
பொய்த்தன்றுகொல்?
|
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
|
5
|
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
|
|
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
|
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
|
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
|
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
|
10
|
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
|
|
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங்
காட்டு,
|
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
|
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
|
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
|
15
|
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
|
|
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
|
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
|
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி
தோழிக்குச் சொல்லியது; தோழி
கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். -
மாமூலனார்
|
|
உரை |
மேல் |