அம்ம வாழி தோழி! காதலர்
|
|
அம்ம! வாழி, தோழி! காதலர்,
|
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர்,
|
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த
|
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
|
5
|
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது
|
|
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி,
|
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு
கோள்
|
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
|
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு,
|
10
|
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம்
|
|
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய,
|
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல்,
|
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்;
|
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள்,
|
15
|
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ,
|
|
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது,
|
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை,
|
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை,
|
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
|
20
|
சோலை அத்தம் மாலைப் போகி,
|
|
ஒழியச் சென்றோர்மன்ற;
|
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?
|
கொண்டு நீங்கக் கருதி
ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
|
|
உரை |
மேல் |