அம்ம வாழி தோழி! கைம்மிகக்
|
|
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
|
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
|
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
|
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
|
5
|
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
|
|
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
|
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
|
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
|
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
|
10
|
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
|
|
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
|
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
|
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
|
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
|
15
|
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
|
|
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
|
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
|
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
|
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
|
20
|
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
|
|
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
|
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
|
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
|
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
|
25
|
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
|
|
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
|
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
|
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
|
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. -
நக்கீரர்
|
|
உரை |
மேல் |